search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shivam Singh"

    • முதலில் ஆடிய திண்டுக்கல் 160 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய திருச்சி 144 ரன்கள் எடுத்து தோற்றது.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    இந்நிலையில், மாலை 3.15 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் அரை சதமடித்து 78 ரன்னில் அவுட்டானார். பாபா இந்திரஜித் 33 ரன்னில் வெளியேறினார்.

    திருச்சி அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஈஸ்வரன் ஹாட்ரிக் உள்பட 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. அந்த அணியில் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.

    அந்த அணியின் ராஜ்குமார் 17 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

    இதன்மூலம் நடப்பு தொடரில் திண்டுக்கல் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    திண்டுக்கல் அணி சார்பில் அஸ்வின் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டி.என்.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
    • முதலில் ஆடிய திண்டுக்கல் 160 ரன்களை எடுத்துள்ளது.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    இந்நிலையில், மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி கேப்டன் அந்தோனி தாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, திண்டுக்கல் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய கேப்டன் அஸ்வின் 5 ரன்னிலும், விமல்குமார் 9 ரன்னிலும் அவுட்டாகினர்.

    மற்றொரு தொடக்க ஆட்டகாரர் ஷிவம் சிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். 3வது விக்கெட்டுக்கு பாபா இந்திரஜித், ஷிவம் சிங் ஜோடி 82 ரன் சேர்த்தது.

    பாபா இந்திரஜித் 33 ரன்னிலும், ஷிவம் சிங் 78 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்குகிறது.

    திருச்சி அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஈஸ்வரன் ஹாட்ரிக் உள்பட 6 விக்கெட் வீழ்த்தினார்.

    ×