search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயரிங்"

    • 120 புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு தயார்நிலையில் உள்ளன.
    • நவம்பர் மாதம் 25-ந் தேதி வெளியிட உள்ளதாக தகவல்.

    மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட உயர்கல்வி சார்ந்த படிப்புகளுக்கான பாடப்புத்தகங்களை இந்தி மொழியில் உத்தரபிரதேச மாநிலம் மொழி பெயர்த்தது.

    அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இதேபோல் தமிழில் மொழிப்பெயர்க்கும் பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. இந்த பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி, மருத்துவப்படிப்பில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான 5 புத்தகங்கள் கடந்த 2022-ம் ஆண்டில் மொழி பெயர்க்கப்பட்டன. இதில் மருத்துவ உடற்செயலியல் உள்ளிட்ட 2 புத்தகங்கள் அதிக பக்கங்களையும், 3 புத்தகங்கள் குறைந்த பக்கங்களையும் கொண்டவையாக இருந்தன.

    அதன்படி, மருத்துவ உடற்செயலியல் புத்தகம் முதலில் வெளியிடும் போது, முதல் தொகுதி மட்டும் வெளியிடப்பட்டது.

    தற்போது அதன் 2-வது தொகுதியையும் சேர்த்து முழு புத்தகமாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு 36 மருத்துவக்கல்லூரிகள், நூலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருக்கின்றன.

    இதனைத் தொடர்ந்து நடப்பாண்டில் மருத்துவப்படிப்புக்கான 700 முதல் 800 பக்கங்களை கொண்ட 'மருத்துவ நுண்ணுயிரியியல்', 'மகப்பேறு மருத்துவம்' ஆகிய 2 புத்தகங்கள், என்ஜினீயரிங் படிப்புக்கான 4 புத்தகங்கள், இதுதவிர அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட உயர்கல்வி சார்ந்த படிப்புகளுக்கான ஆங்கில வழி புத்தகங்கள், தமிழ்வழியில் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கின்றன.

    அதேபோல், ஆங்கில இலக்கியங்கள் தமிழிலும், தமிழ் இலக்கியங்கள் ஆங்கில மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    அந்தவகையில் 120 புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு தயார்நிலையில் இருப்பதாகவும், வருகிற நவம்பர் மாதம் 25-ந் தேதி (திங்கட்கிழமை) சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இந்த புத்தகங்களை சசிதரூர் எம்.பி. வெளியிட உள்ளதாகவும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுபோன்ற உயர்கல்விச் சார்ந்த 200 பாடப்புத்தகங்களை ஒவ்வொரு ஆண்டும் மொழி பெயர்த்து வெளியிட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இலக்கு நிர்ணயித்து பணிகளை மேற்கொள்கிறது.

    அதன்படி, தற்போது வரை 120 புத்தகங்கள் மொழி பெயர்க்கும் பணிகள் முடிந்து நவம்பரில் வெளியிட உள்ள நிலையில், மீதமுள்ள புத்தகங்கள் வருகிற ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்குள் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.

    • கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • கல்லூரி, பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில், நவ.22-

    நாகர்கோவில் பொன் ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியில் கல்வி குழுமத் தின் சேர்மன் பொன் ராபர்ட் சிங் அறிவுறுத்த லின்படி, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கும், பொன்ஜெஸ்லி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கும் யோகா பயிற்சி வகுப்பு கல்லூரி வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனர் அருள்சன் டேனியல் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஐசக் சாஜன், பொன் ஜெஸ்லி இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் வாசு ரஞ்சனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா சிறப்பு ரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக யோகா மாஸ்டர் கோமதி பங்கேற்று யோகா பயிற்சியின் விளக்க உரை யும், செய்முறையையும் மாணவர்களுக்கு வழங்கி னார்.

    இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. குமரி மாவட்ட கூடைப்பந் தாட்ட கழக செயலாளர் பி. மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் கல்லூரி, பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
    • விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கியது. என்ஜினியரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 4ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், இதுவரை மொத்தம் 2,29,167 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

    இதில் 1,87,693 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் 1,55,124 பேர் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர். இந்த மாணவர்களுக்கான தரவரிசை முடிவு செய்யும் வகையில் ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது. ஒரே மாதிரியாக கட் ஆஃப் பெறும் மாணவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது ரேண்டம் எண் மூலம் முடிவு செய்யப்படும்.

    ரேண்டமில் பெரிய எண் பெற்ற மாணவர்களுக்கு தரவரிசையில் முன்னுரிமை வழங்கப்படும். மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இணைய வழியில் வருகிற 20ம் தேதி தொடங்குகிறது.

    இந்த ஆண்டுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு ஆன்லைன் வழியாக அடுத்த மாதம் 2-ம் தேதி தொடங்க உள்ளது. சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 2 முதல் 5ம் தேதி வரையும், பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 24ம் தேதி வரை நடைபெறுகிறது.

    மாணவர்கள் ரேண்டம் எண் மற்றும் கூடுதல் விவரங்களை www.tneaonline.org மற்றும் tndte.gov.in ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேதியியல், இயற்பியல் போன்ற முக்கிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
    • கடந்த ஆண்டு அனைத்து போர்டுகளையும் உள்ளடக்கிய ரேங்க் பட்டியலில் 134 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேர்வு எழுதிய 94 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் கணித பாடத்தில் 690 பேர் மட்டும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். கடந்த ஆண்டில் 1,858 பேர் கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று இருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 3 பங்கு சென்டம் குறைந்துள்ளது.

    ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேதியியல், இயற்பியல் போன்ற முக்கிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    வேதியியல் பாடத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு 1,500 மாணவர்கள் மட்டுமே 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று இருந்த நிலையில், இந்த ஆண்டு 3,909 பேர் சென்டம் வாங்கி உள்ளனர்.

    இதே போல இயற்பியல் பாடத்தில் கடந்த ஆண்டு சென்டம் வாங்கியவர்களின் எண்ணிக்கை 634 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு அது 812 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த ஆண்டு உயிரியலில் 1,494 பேரும், தாவரவியலில் 340 பேரும், விலங்கியலில் 154 பேரும், கணித அறிவியலில் 4,618 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    கணினி அறிவியல் பாடத்தில் கடந்த ஆண்டு 3,827 பேர் சென்டம் பெற்றிருந்தனர். அது இந்த ஆண்டு 4,618 ஆக உயர்ந்துள்ளது.

    மொத்தத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 8,544 மாணவ-மாணவிகள் அதிகமாக 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். பிளஸ்-2 தேர்வில் கணித அறிவியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் 200 மதிப்பெண்ணாக குறைக்கப்பட்டு (கணிதம் 100, வேதியியல்+ இயற்பியல் 100 மதிப்பெண்) அடிப்படையில் என்ஜினீயரிங் தர வரிசை பட்டியல் தயாரிக்கப்படும்.

    இந்த ஆண்டு கணித பாடத்தில் சென்டம் வாங்கியவர்கள் எண்ணிக்கை குறைந்தாலும் கூட வேதியியல் பாடத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 2 மடங்கு பேர் கூடுதலாக முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலை பொறுத்தவரை இயற்பியல், வேதியியலை விட 2 மடங்கு கூடுதல் முக்கியத்துவம் கணித பாடத்திற்கு கொடுக்கப்படுகிறது. எனவே என்ஜினீயரிங் கட்-ஆப் மதிப்பெண் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

    மேலும் கடந்த ஆண்டு அனைத்து போர்டுகளையும் உள்ளடக்கிய ரேங்க் பட்டியலில் 134 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

    இந்த ஆண்டு கணித பாடத்தில் சென்டம் வாங்கியவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்திருப்பதோடு, அந்த பாடத்தில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளதால் என்ஜினீயரிங் சேர்கைக்கான கவுன்சிலிங்கில் கட்-ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது என கல்வி நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    அதே நேரத்தில் கணக்கு பதிவியல் மற்றும் வணிகவியல் பாடங்களில் சென்டம் வாங்கியவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் நகர கல்லூரிகளில் பி.காம் இடங்களை பெறுவதற்கு கடும் போட்டி நிலவும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

    கணக்கு பதிவியலில் 6,573 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 44 சதவீதம் அதிகமாகும். இதே போல வணிகவியலில் 5,678 பேர் சென்டம் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 22 சதவீதம் அதிகமாகும்.

    எனவே லயோலா போன்ற கல்லூரிகளில் இந்த ஆண்டு பி.காம் பொதுப்பிரிவு இடங்களுக்கு கட்-ஆப் மதிப்பெண்கள் 100 சதவீதத்தை கூட தொடக்கூடும் என கல்வி ஆலோசகர்கள் கணித்துள்ளனர்.

    இதுகுறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், கடந்த ஆண்டு லயோலா கல்லூரி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிகளில் பி.காம் இடங்களுக்கான கட்-ஆப் 98 சதவீதம் வரை இருந்தது. இந்த ஆண்டு அங்கு பி.காம் படிப்புகளுக்கு கட்-ஆப் 99 சதவீதத்தை தாண்டும் அல்லது 100 சதவீதத்தை தொட வாய்ப்புள்ளது.

    இந்த ஆண்டு சி.பி.எஸ்.சி. காமர்ஸ் ஸ்ட்ரீம் தேர்வுகள் கூட எளிதாக இருந்ததாகவும் அந்த மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்றும் அவர் கூறினார்.

    ஒட்டு மொத்தமாக வேதியியல், கணித அறிவியல் போன்ற பாடங்களிலும் குறைந்தது ஒரு பாடத்திலாவது முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

    • 3 பேர் படுகாயம் அடைந்தனர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே வாணி யக்குடி ஆனப்பான்குழியை சேர்ந்தவர் ஜூடி. இவரது மகன் ஜெபின் (வயது 19).ஜெபின் வெள்ளமோடி அருகே ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    நேற்று காலை வழக்கம் போல் ஜெபின் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றார்.மோட்டார் சைக்கிளின் பின்னால் கோடிமுனையை சேர்ந்த மாணவர் ஜெனிஸ்டன் அமர்ந்திருந்தார். மோட்டார் சைக்கிள் குளச்சல் பெரிய பள்ளி முக்கு சந்திப்பு அருகே செல்லும்போது திடீரென நிலை தடுமாறி எதிரே புத்தளம் சேதுபதிவூரை சேர்ந்த தொழிலாளி குமார் (57) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. குமாரின் பின்னால் மற்றொரு தொழிலாளி சரவணன் உட்கார்ந்திருந்தார்.

    இந்த சம்பவத்தில் 2 மோட்டார் சைக்கிள் களில் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படு காயமடைந்தனர்.அப்பகுதி யினர் அவர்களை மீட்டு உடையார்விளையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெபின் பரிதாப மாக இறந்தார். ஜெனிஸ்டன், குமார், சரவணன் ஆகிய 3 பேரும் தொடர்ந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து தொழிலாளி குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான ஜெபின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    • முதல் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 10-ந்தேதி தொடங்கியது.
    • 4-வது சுற்று கலந்தாய்வு நிறைவு பெற இருக்கிறது.

    சென்னை :

    என்ஜினீயரிங் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடந்து வரும் நிலையில், 4-வது சுற்று நிறைவு பெற இருக்கிறது. இந்த நிலையில் முதல் கட்ட கலந்தாய்வில் இடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கான என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது தொடங்கும்? என்பது குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது.

    அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் பி.இ., பி.டெக். (முழு நேரம்) படிப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு முதல் செமஸ்டருக்கான அறிமுக வகுப்புகள் வருகிற 14-ந்தேதியும், பாடங்களுக்கான வகுப்புகள் வருகிற 28-ந்தேதியும் தொடங்குகிறது. இந்த செமஸ்டருக்கான கடைசி வேலைநாள் அடுத்த ஆண்டு (2023) மார்ச் 23-ந்தேதி ஆகும்.

    அதேபோல் பி.ஆர்க். (முழு நேரம்) படிப்பில் சேர்ந்தவர்களுக்கு அறிமுக வகுப்புகள் 14-ந்தேதியும், பாடங்களுக்கான வகுப்புகள் 28-ந்தேதியும் தொடங்கும் என்றும், இவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி கடைசி வேலைநாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் அனைவருக்கும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் செய்முறை தேர்வும், அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி முதல் செமஸ்டர் தேர்வும் தொடங்கி நடைபெறும். முதல் செமஸ்டர் முடிந்து, அதற்கு அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு மே மாதம் 15-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 15 நாட்கள் நடக்கும் அறிமுக வகுப்புகளில், மாணவர்கள் தேர்ந்தெடுத்த துறை, கல்லூரி குறித்தும், படிப்புக்கு பின்னர் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள், தொழில் முனைவோராவதற்கான வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும்.

    • பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளிடம் இருந்த ஆன்லைன் வாயிலாக வரவேற்கப்பட்டன.
    • அரசு பள்ளிகளில் படித்த மாணவ- மாணவி–களின் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 3 பேர் சேலம் மாவட்டத்தில் இருந்து இடம் பிடித்துள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கைக்கான -2022 விண்ணப்பங்கள் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளிடம் இருந்த ஆன்லைன் வாயிலாக வரவேற்கப்பட்டன.

    இதையடுத்து கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்து.

    இதில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ- மாணவி–களின் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 3 பேர் சேலம் மாவட்டத்தில் இருந்து இடம் பிடித்துள்ளனர்.

    அதன்படி சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ரோகித் 198.50 கட் ஆப் மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார். எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் கரண்ராஜ் 6-ம் இடம், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி வர்ஷா 8-ம் இடம் பிடித்தனர்.

    • கல்லூரிகள் தொடங்கியுள்ள புதிய பாடப்பிரிவுகளால் 13 ஆயிரத்து 331 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
    • பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 110 சேவை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

    இதையடுத்து என்ஜினீயரிங் மற்றும் பி.டெக் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு http://www.tneaonline.org என்ற இணைய தள முகவரியில் நேற்றே தொடங்கியது.

    மாணவர்கள் தாங்களாகவும், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் என்ஜினீயரிங் மற்றும் பி.டெக் படிப்புகளுககு விண்ணப்பித்தனர். பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 110 சேவை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலமும் மாணவர்கள் விண்ணபித்தனர்.

    முதல் நாளான நேற்று மட்டும் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு 18 ஆயிரத்து 763 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். இவர்களில் 4,199 மாணவர்கள் கவுன்சிலிங்குக்கான கட்டணத்தை செலுத்தி உள்ளனர். 790 மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளதாக என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்து உள்ளது.

    தமிழகத்தில் என்ஜினீயரிங் சேர்க்கைக்கான ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் மூலம் மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 872 இடங்கள் கிடைக்கும். கடந்த ஆண்டை விட 9,196 இடங்கள் அதிகமாக கிடைக்கும். கல்லூரிகள் தொடங்கியுள்ள புதிய பாடப்பிரிவுகளால் 13 ஆயிரத்து 331 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சில பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டதால் 1,316 இடங்கள் இழந்துள்ளன. 8 கல்லூரிகள் கவுன்லிங்கில் பங்கேற்காது. 2 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு மொத்தம் 221 கல்லூரிகள் புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளன.

    பி.டெக் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் என்ஜினீயரிங் (சைபர் பாதுகாப்பு), பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் என்ஜினீரிங் (செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரகற்றல்), பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பிசினஸ்சிஸ்டம், பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் என்ஜினீயரிங் (இண்டர்நெட் ஆப் திங்ஸ்), பி.டெக் வேளாண் என்ஜினீயரிங், பி.இ. பயோமெடிக்கல் என்ஜினீயரிங், பி.டெக் தகவல் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

    மெக்கானிக்கல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் ஆகிய பாடங்களை 201 கல்லூரிகள் திரும்ப பெற்றன.

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது பி.இ., பி.டெக் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கியது, சிறப்பு மையங்களில் மாணவ- மாணவிகள் திரண்டனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை, தொழில் நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். போன்ற படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 110 சிறப்பு உதவி மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

    இதன் அடிப்படையில் சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி நூலக கட்டிட வளாகத்தில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல் வனவாசி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியிலும் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்ற சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு மையங்களில் இன்று முதல் காலை கம்ப்யூட்டர் வழியாக விண்ணப்பப் பதிவு தொடங்கியது. குறிப்பாக, காலை 9.30 மணி அளவில் பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் சிறப்பு மையங்களில் மாணவ- மாணவிகளின் வருகை அதிகமாக உள்ளது.

    மாநகர் பகுதியில் வசிக்கும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் அசல் மற்றும் நகல் கல்வி சான்றுகள், 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றுகள், ஆதார்கார்டு, சாதி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தங்களது பெற்றோருடன் இந்த மையங்களில் திரண்டுள்ளனர்.

    என்ஜினீயரிங் படிப்புகளில் சேர வேண்டி அவர்கள் வரிசையாக நின்று ஆர்வத்துடன் என்ஜினீயரிங் படிப்புக்கு தங்களது விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

    அதுபோல், பிளஸ்-2 தேர்வு முடிவு ெவளியானவுடன் எடப்பாடி, கொளத்தூர் மேட்டூர், மேச்சேரி, ஓமலூர், தாரமங்கலம், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், வாழப்பாடி, ஏத்தாப்பூர், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, ஏற்காடு, வீராணம், வீரபாண்டி, காகாபாளையம், இடங்கணசாலை, சித்தர் கோவில், மகுடஞ்சாவடி, சங்ககிரி, தேவூர், இளம்பிள்ளை உள்ளிட்ட தொலை தூரத்தில் உள்ள மாணவ- மாணவிகள் பஸ்களில் புறப்பட்டு சிறப்பு மையங்களுக்கு தங்களது பெற்றோருடன் படையெடுத்தபடி உள்ளனர். இதனால் சிறப்பு மையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் டோக்கன் வழங்கப்பட்டு விண்ணப்பதிவு நடைபெற்று வருகிறது.

    இந்த மையங்கள் மாலை 5 மணி வரை செயல்படும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி ஆகும். விண்ணப்பதாரர்கள் https://tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப்பதிவை மேற்கொள்ளலாம்.

    என்ஜினீயரிங் படிப்பு ஆன்லைன் விண்ணப்பத்துக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கு தடை விதிக்க தேவையில்லை என்று ஐகோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர். #Engineering
    சென்னை:

    என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன், வக்கீல் பொன்பாண்டி உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர். பின்னர் இன்று நீதிபதிகள் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர்.

    இந்த வழக்கில் அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் முறை, மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் நடப்பதை உறுதி செய்கிறது. மாவட்டந்தோறும் பயிற்சி பெற்ற உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் விண்ணப்பம் செய்ய சென்னைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை.


    2 லட்சம் மாணவர்கள் எழுத்துப்பூர்வமான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யும்போது ஏற்படும் நேர விரயத்தை ஆன்லைன் விண்ணப்ப முறை தவிர்க்கிறது. எனவே ஆப்லைன் விண்ணப்பம் ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது.

    மாணவர்கள் மனதில் அச்சத்தை நீக்கும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை பின்பற்றப்படும் என்றும், நீதிமன்றம் அதை கண்காணிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    எனவே, மாணவர்கள் சந்திக்கக்கூடிய சிக்கல்களை அடையாளங்கண்டு மனுதாரர்கள் தெரிவிக்க வேண்டும். அதேநேரம், விண்ணப்பக் கட்டணத்தை கேட்பு காசோலையாக பெற்றுக்கொள்ள ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் ஒத்துக்கொண்டுள்ளது. அதன்படி, மாணவர்களிடம் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். உதவி மையங்களில் பயிற்சிபெற்ற ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும், மூத்த கண்காணிப்பாளர் நியமித்து அங்குள்ள பணிகளை கண்காணிக்க வேண்டும். இவற்றை பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாக விளம்பரப்படுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கு தடை விதிக்க தேவையில்லை.

    இந்த உத்தரவை நிறைவேற்றிய பின்னர், அதுதொடர்பான அறிக்கையை ஜூன் 8ந் தேதி அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். #Engineering #AnnaUniveristy
    ஆன்லைன் கலந்தாய்வுடன், நேரடி கலந்தாய்வு முறையையும் அண்ணா பல்கலைக் கழகம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #AnnaUniversity #Engineering #MKStalin
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு இதுவரையிலும் மாணவர்களின் நேரடி பங்களிப்பில் நடைபெற்று வந்ததை திடீரென மாற்றி, 2018 பொறியியல் மாணவர் சேர்க்கை இணைய வழியாக நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்ததால், கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய, நடுத்தட்டு பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் பெரும் தொல்லைகளுக்கும், துன்பங்களுக்கும் உள்ளானார்கள்.


    ஆகவே, தி.மு.க. மாணவரணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுரையின்படி, பொறியியல் சேர்க்கை நடைபெறும் சேவை மையங்களில் விண்ணப்ப கட்டணமாக டிமான்ட் டிராப்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இணைய வழி விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வு முறையால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே, இந்த வழக்கை தி.மு.க. தொடுத்தது.

    எனவே, இந்த நடவடிக்கை கிராமப்புற மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் கலந்தாய்வுடன், நேரடி கலந்தாய்வு முறையையும் கடைப்பிடிப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #AnnaUniversity #Engineering #MKStalin
    என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பத்தை தமிழில் பூர்த்தி செய்ய அனுமதி அளிப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. #Engineering #AnnaUniversity
    சென்னை:

    என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன், வக்கீல் பொன்.பாண்டியன் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்குகளை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழகம் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில், நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நடப்பு கல்வியாண்டில் ‘ஆன்லைன்’ மூலமாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று கடந்த கல்வி அண்டே அறிவித்து விட்டோம். வெளியூர் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் விண்ணப்பம் கொடுப்பதற்காக சென்னை வந்து செல்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை கருத்தில் கொண்டே ‘ஆன்லைன்’ மூலமாக விண்ணப்பிக்கவும், கலந்தாய்வில் பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு விண்ணப்பிக்க ஆங்கில அறிவோ அல்லது கம்ப்யூட்டர் அறிவோ அவசியம் கிடையாது. வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றினாலே எளிதாக விண்ணப்பித்து விடலாம்.

    கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, போதிய எண்ணிக்கையில் ஆட்களையும் நியமித்துள்ளோம். எனவே, ஆன்லைன் கலந்தாய்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் முறை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. எனவே ஆன்லைனால் கிராமப்புற மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கடந்த மே 3-ந் தேதியில் இருந்து மே 7-ந் தேதி வரை 30 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


    ஆனால் மனுதாரர்கள் தரப்பில், ‘ஆன்லைனில் விண்ணப்பிக்க வங்கி கணக்கும், விண்ணப்பத் தொகையை செலுத்த டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு, ‘நெட்பேங்கிங்’ அவசியம் தேவையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் மட்டுமே பூர்த்தி செய்யவேண்டும் என்ற நிலை கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று கூறியிருந்தனர்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘கிராமப்புற மாணவர்கள் பலருக்கு வங்கி கணக்கு கூட கிடையாது. அவ்வாறு வங்கி கணக்கே இல்லாத மாணவர்களிடம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு எப்படி இருக்கும்? இவற்றை பயன்படுத்தி அவர்கள் எப்படி விண்ணப்பிக்க முடியும்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    பின்னர் நீதிபதிகள், ‘இந்த நடைமுறை சிக்கல் உள்ளதால், மாற்று நடவடிக்கையாக விண்ணப்பத்தொகையை ரொக்கம் அல்லது வரைவோலையாக (டிமாண்ட் டிராப்ட்) செலுத்த அனுமதிக்கலாமா? என்பது குறித்தும், விண்ணப்பத்தை தமிழில் பூர்த்தி செய்ய அனுமதி வழங்குவது குறித்தும் அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலிக்க வேண்டும். அதன்பின்னர் எடுக்கப்பட்ட முடிவை இன்று (வியாழக்கிழமை) மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. #Engineering #AnnaUniversity #highcourt
    ×