என் மலர்
நீங்கள் தேடியது "சேலம்"
- ஐ.ஏ.எஸ். நிலை அதிகாரிகளைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும்.
- அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான இளம் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் வர வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் வருவாயிலும், நிலப்பரப்பிலும் பெரிய 6 மாநகராட்சிகளில் ஒன்றான சேலம் மாநகராட்சியின் ஆணையராக இந்திய ஆட்சிப்பணி அல்லாத அதிகாரியான இளங்கோவன் நியமிக்கப்பட்டிருப்பதில் அப்பட்டமான விதிமீறல்கள் நடைபெற்றிருப்பதாகவும், ஆட்சியாளர்களின் விருப்பங்களை எதிர்கேள்வி எழுப்பாமல் நிறைவேற்றுபவர் என்பதால் தான் அவர் சேலம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப் பட்டிருக்கிறார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சேலம் மாநகராட்சி ஆணையராக இளங்கோவன் நியமிக்கப்பட்டதை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி ஆணையர் பணியிடங்களும் ஐ.ஏ.எஸ். நிலை அதிகாரிகளைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும். அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான இளம் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை ஆணையாளர்களாக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சேலம்:
மேச்சேரி அருகே உள்ள சீராமணி பகுதியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மனைவி வசந்தி (வயது 28). இவர் மேச்சேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
இன்று வழக்கம் போல வேலைக்கு வந்த அவர் அங்கு விஷ மாத்திரைகள் சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்த மற்ற ஊழியர்கள்அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கதறிய படி அங்கு வந்த அவர்கள் சூப்பர் மார்க்கெட்டை முற்று கையிட்டு போராட்டத்தல் ஈடுபட்டனர். மேலும் அந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் தான் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த ஊழியர் மற்றும் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.