search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் கடன்"

    • ஆன்லைன் கடன் செயலி மூலம் பணம் பெற வேண்டாம் என போலீசார் பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
    • புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்(வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு நூல் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று அவரும், அவரது மனைவி விஜி(26), மகள் வின்சிலின்(6) ஆகியோர் அவர்கள் வீட்டின் அருகே மயங்கிய நிலையில் கிடந்தனர்.

    இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆன்லைன் கடன் செயலி மூலமாக சிறிய தொகை கட்டினால் பெரும் தொகை கடனாக வழங்கப்படும் என்பதை நம்பி ராஜீவ் அவரது நண்பர்களிடம் ரூ.40ஆயிரம் வரை கடன் வாங்கி, ஆன்லைன் செயலியின் வங்கி கணக்கிற்கு செலுத்தி உள்ளார். இந்தநிலையில் திடீரென ஆன்லைன் செயலி முடங்கியது. இதனால் ராஜீவ் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் நண்பர்கள் கடனை திருப்பி கேட்டுள்ளனர். இதன் காரணமாக ராஜீவ் தனது மனைவி, குழந்தையுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஆன்லைன் கடன் செயலி மூலம் பணம் பெற வேண்டாம் என போலீசார் பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் பலர் கடன் வாங்கி வருகின்றனர். இந்தநிலையில் பல்லடத்தில் ஆன்லைன் கடன் செயலி மோசடியால் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பெண்ணுடன் ஆபாசமாக இருப்பதுபோல் மார்பிங் வீடியோவை மனைவிக்கு அனுப்பியதால் ராஜேஷ் தற்கொலை செய்து கொண்டார்.
    • ராஜேஷ் போட்டோவை மார்பிங் செய்து அவரது மனைவிக்கு அனுப்பியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், என்.டி.ஆர் மாவட்டம், இப்ராகிம் பட்டணம் மண்டலம், சுராய பலேனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவர் இங்கிலாந்து பிரிட்ஜ் கோர்ஸ் நிறுவனத்தில் ஆலோசகராக வேலை செய்து வந்தார். ஆன்லைன் மூலம் இவர் லோன் ஆப்பில் கடன் வாங்கியுள்ளார்.

    வாங்கிய கடனை மொத்தமாக திருப்பி செலுத்தி உள்ளார். இருப்பினும் மேலும் ரூ 10 ஆயிரம் கட்ட வேண்டும் என லோன் ஆப் நிறுவனத்தினர் ராஜேஷுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

    இதனால் லோன் ஆப் நிறுவனத்தினர் போன் செய்தபோது போனை எடுக்காமல் இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த லோன் ஆப் நிறுவனத்தினர் ராஜேஷ் வேறு ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருப்பது போலவும் ஆபாசமான பெண்ணிடம் வீடியோ காலில் பேசுவது போலவும் போட்டோ, வீடியோவை மார்பிங் செய்து அவரது மனைவி ரத்தினகுமாரிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தனர்.

    இதனை கண்ட ரத்தினகுமாரி, ராஜேஷிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது ராஜேஷ் லோன் ஆப் நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அவர்கள் இதுபோன்று போட்டோ வீடியோவை மாப்பிங் செய்து அனுப்பியதாக மனைவியிடம் தெரிவித்தார்.

    லோன் ஆப் மூலம் வாங்கிய கடனை அந்த பெண்ணுக்கு தான் செலவு செய்தாயா? வேறு எதற்காக கடன் வாங்கினாய் என சண்டையிட்டார். மேலும் ரத்தினகுமாரி ராஜேஷிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதனால் விரக்தி அடைந்த ராஜேஷ் நேற்று காலை நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என மனைவிக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பி விட்டு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கணவர் அனுப்பிய மெசேஜை பார்த்த ரத்தினகுமாரி அதிர்ச்சி அடைந்து அவருக்கு பலமுறை போன் செய்தார். ராஜேஷ் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது ராஜேஷ் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதை கண்டு அவர் கதறி துடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இப்ராகிம் பட்டிணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேஷ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் போட்டோவை மார்பிங் செய்து அவரது மனைவிக்கு அனுப்பியது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என தொடர்ந்து செல்போனில் மிரட்டி வந்தனர்.
    • வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஹரிகிருஷ்ணா நேற்று தனது மனைவியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் அனுப்பினார்.

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த நாயுடு பேட்டையை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணா (வயது 32). இவருக்கு ரஜிதா என்ற மனைவியும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். ஹரி கிருஷ்ணா சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தார். பின்னர் சாப்ட்வேர் நிறுவனம் ஹரி கிருஷ்ணாவை வேலையிலிருந்து நீக்கி விட்டனர். இதனால் வருவாய் இன்றி குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்ட ஹரி கிருஷ்ணா ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கினார்.

    அவருக்கு வருவாய் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என தொடர்ந்து செல்போனில் மிரட்டி வந்தனர். அதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஹரிகிருஷ்ணா நேற்று தனது மனைவியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் அனுப்பினார்.

    அதில் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து மிரட்டி வருவதால் தனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். குழந்தையை நன்றாக பார்த்துக்கொள். தந்தை இல்லாத குழந்தை எவ்வளவு சிரமப்படும் என்பதை நான் அறிவேன். இருப்பினும் குழந்தையை நன்றாக கவனித்துக்கொள் என தகவல் அனுப்பி இருந்தார்.

    இதையடுத்து நாயுடு பேட்டை அருகே உள்ள ரெயில் நிலையத்திற்கு சென்ற ஹரிகிருஷ்ணா அந்த வழியாக சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    போலீசார் ஹரி கிருஷ்ணா பிணத்தை மீட்டு அவரது சட்டை பையில் இருந்து கடிதத்தை கைப்பற்றினர். தனது தாய் தந்தைக்கு ஹரிகிருஷ்ணா கடிதம் எழுதி இருந்ததார். உங்களைப் பிரிந்து செல்வது எனக்கு மனவேதனையாக உள்ளது. என் மனைவியும் மகளையும் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். அவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள் என கடிதத்தில் எழுதியுள்ளார்.

    ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்றவர்கள் ஆந்திராவில் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவதால் ஆன்லைன் கடன் வழங்கும் ஆப்பை தடை செய்ய வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் மனமுடைந்த பாண்டியன் தற்கொலை செய்துள்ளார்.
    • ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    சென்னை:

    ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் பெற்றவர்கள் அதனை திருப்பிச் செலுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பணத்தை வசூலிக்க பல்வேறு யுக்திகளை கையாள்கின்றன. குறிப்பாக, கடன் பெற்றவர்களை அவமானப்படுத்தி அவர்களை கூனிக் குறுகச் செய்வதன் மூலம் பணத்தை விரைவாக வசூலிக்கின்றனர். இவ்வாறு செய்யும்போது சிலர் அவமானம் தாங்காமல் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு செல்கின்றனர். அவ்வகையில் சென்னையில் இன்று ஒருவர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். தனியார் ஓட்டலில் பணியாற்றிய இவர், ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் பெற்றுள்ளார். குறிப்பிட்ட காலத்தில் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் அவரது புகைப்படங்களை ஆன்லைன் செயலி நிறுவனத்தினர் ஆபாசமாக சித்தரித்து, அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி உள்ளனர். இதனால் மனமுடைந்த பாண்டியன் இன்று தூக்கு போட்டு இறந்துள்ளார். இதுகுறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இருப்பினும் வங்கிகளின் உள்ள நடைமுறைகளை விட ஆன்லைனில் விரைவாக கடன் கிடைப்பதால் பலர் ஆன்லைன் செயலிகளையே நாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×