என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2பேர்"

    • போலியாக மருத்துவம் பார்த்து வந்ததாக சேலம் மாவட்ட எஸ்.பி. சிவகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மருந்து மாத்திரையை கைப்பற்றி தேவராஜனை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சங்ககிரி:

    சங்ககிரி விஎன்பாளையம் பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (63). இவர் சங்ககிரி தெலுங்கர் தெரு பகுதியில் ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு போலியாக மருத்துவம் பார்த்து வந்ததாக சேலம் மாவட்ட எஸ்.பி. சிவகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில், சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்யராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் போலீசார் மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை டாக்டர் ஆர்த்தி, வருவாய் ஆய்வாளர் கீதா, உள்ளிட்ட குழுவினர் சென்று சோதனை நடத்தினர். அப்போது நோயாளிகளுக்கு பன்னீர்செல்வம் ஆங்கில மருத்துவம் பார்த்தது உறுதியானது.

    போலி மருத்துவர் பன்னீர் செல்வத்தை போலீசார் கைது செய்து நோயாளிகளுக்கு பயன்படுத்தி வந்த மருந்து மாத்திரைகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து, சங்ககிரி வைகுந்தம் காளிப்பட்டி பிரிவு பகுதியைச் சேர்ந்த தேவராஜன் (67), என்பவர் வீட்டில் வைத்து ஆங்கில மருத்துகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு போலியாக மருத்துவம் பார்த்து தெரியவந்தது.

    அதன் பேரில் சங்ககிரி அரசு மருத்துவர் செந்தில்வேலுடன் சென்று சோதனை செய்தபோது போலி மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டு மருந்து மாத்திரையை கைப்பற்றி தேவராஜனை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.சங்ககிரியில்

    போலி மருத்துவர்கள் 2பேர் கைது

    • பட்டீஸ்வரன் ( வயது 30). இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூம் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
    • வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் எருமாபாளையம் பால்காரர் தெரு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (32), ரம்யா (31) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் வீரபாண்டியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பட்டீஸ்வரன் ( வயது 30). இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூம் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இவர் தாதகாப்பட்டி பில்லுக்கடை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அருகே ஒரு வேலை விஷயமாக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த சிலர் பட்டீஸ்வரனிடம் தனியாக அழைத்து பேச்சு கொடுத்து , தங்களிடம் அழகான இளம்பெண்கள் இருப்பதாகவும் , ரூ.2000 கொடுத்தால் அவர்களுடன் ஜாலியாக உல்லாசம் அனுபவிக்கலாம் என்றும் கூறி அவரை விபசாரத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து பட்டீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் எருமாபாளையம் பால்காரர் தெரு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (32), ரம்யா (31) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×