என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனப்பாடம்"

    • சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிறுமி தக்ஷன்யாஸ்ரீ திருக்குறளில் 1330 குறளில் 1000 குறள்களை மனப்பாடம் செய்துள்ளார்.
    • சிறுமியின் சாதனை கலாம் உலக சாதனைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் நாகலட்சுமியின் மகள் தக்ஷன்யாஸ்ரீ (வயது 9). இவர்

    5-ம் வகுப்பு படித்து வருகிறார். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிறுமி தக்ஷன்யாஸ்ரீ திருக்குறளில் 1330 குறளில் 1000 குறல்களை மனப்பாடம் செய்துள்ளார். மேலும் மீதமுள்ள 330 குறளையும் மனப்பாடம் செய்ய படித்து வருகிறார்.

    இந்நிலையில் இவர் திருக்குறளில் 133 அதிகாரப் பெயர்களை குறைந்த நேரத்தில் அதாவது 70 வினாடிகளில் கூறி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதனால் சிறுமியின் சாதனை கலாம் உலக சாதனைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதனை படைத்த தக்ஷன்யாஸ்ரீயை பள்ளி கல்லூரி மாணவ -மாணவிகள், ஆசிரியர்கள், போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

    ×