என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராம்கோ தொழிலாளர்"
- தீபாவளி பண்டிகையையொட்டி ராம்கோ குழும தொழிலாளர்களுக்கு ரூ.12.49 கோடி போனஸ் பட்டுவாடா செய்ய சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா உத்தரவு பிறப்பித்தார்.
- எஸ்.ஆர்.ஸ்ரீராம ராஜா முன்னிலையில் நடந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் ராம்கோ குரூப் நூற்பாலை மற்றும் துணி உற்பத்தி ஆலைகளில் 2021-22-ம் நிதி ஆண்டிற்கான போனஸ் பேச்சுவார்த்தை ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர். வெங்கட்ராமராஜா, இயக்குநர் பி.வி.அபிநவ் ராமசுப்பிரமணிய ராஜா, ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸின் நிர்வாக இயக்குநர் என்.ஆர்.கே. ராம்குமார் ராஜா, ஸ்ரீ விஷ்ணு சங்கர் மில்ஸின் நிர்வாக இயக்குநர் எஸ்.ஆர்.ஸ்ரீராம ராஜா முன்னிலையில் நடந்தது.
இதில் ராம்கோ குழுமத்தின் அனைத்து நூற்பாலைகளுக்கும், துணி உற்பத்தி ஆலைகளுக்கும் போனஸ் தொகையினை சேர்மன் அறிவித்தார். இதன்படி ராம்கோ குழுமத்தை சேர்ந்த நூற்பாலை மற்றும் துணி உற்பத்தி ஆலைகளில் பணி புரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு போனஸ் தொகை ரூ.12.49 கோடி பட்டுவாடா செய்ய சேர்மன் உத்தரவிட்டார்.
இந்த பேச்சுவார்த்தையில் ராம்கோ நூற்பாலை மற்றும் துணி உற்பத்தி பிரிவின் தலைவர் மோகனரங்கன், முதன்மை நிதி அதிகாரி ஞானகுருசாமி, துணை தலைவர் (மனிதவளம்) நாகராஜன், முதுநிலை துணை தலைவர் (பேப்ரிக்ஸ்) முருகேச பிள்ளை, சுதர்சனம் எஸ்பின்னிங் மில்ஸின் முதன்மை நிதி அதிகாரி விஜயகோபால், துணை பொது மேலாளர் (மனிதவளம்) ரங்கராஜ், மில்ஸ் தொழிற்சங்கங்களின் சார்பில் தேசிய தொழிலாளர் காங்கிரஸ் எச்.எம்.எஸ் பொது செயலாளர் என்.கண்ணன், மில் தொழிலாளர் சங்க ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் விஜயன், தேசிய பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் ஐ.என்.டி.யு.சி. தலைவர் ஆர்.கண்ணன் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ராம்கோ குரூப் நிறுவனம், வழக்கம்போல் இந்த ஆண்டும் சிற ப்பான போனஸ் தொகை யினை அறிவித்து, தொழிலாளர்களை ஊக்கப்படுத்தியதற்கு தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் நன்றி யையும், மகிழ்ச்சியையும் நிர்வாகத்திற்கு தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்