என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தென்னை மரத்தில்"
- கனமழை பெய்து கொண்டிருந்த போது மின் கம்பிகள் தென்னங்கீற்றில் உரசியது.
- தென்மரத்தின் கிளையில் தீ பற்றி எரிய தொடங்கியது.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் மற்றும் கள்ளிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடிரென காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதில் அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் கள்ளிப்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஒரு தென்னை மரம் உள்ளது.
அந்த மரத்தின் அருகே உயர் மின்னழுத்த கம்பிகள் செல்கின்றன. இந்நிலையில் இடி மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்த போது மின் கம்பிகள் தென்னங்கீற்றில் உரசியதில் மின் கசிவு ஏற்பட்டு தென்மரத்தின் கிளையில் தீ பற்றி எரிய தொடங்கியது.
தற்போது மழை காலம் என்பதால் இதுபோன்று நிகழ்வால் ஏதேனும் ஆபத்து ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக மரக்கிளைகளுக்கு இடை யில் செல்லும் மின் கம்பி களை முறையாக பராமரிப்பு செய்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
- அப்போது செந்தில்குமார் தோட்டத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தின் மீது திடீரென இடி விழுந்தது.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையம், டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த தங்கமுத்து என்ப வரது மகன் செந்தில்குமார். இவர் தனது தோட்டத்தில் தென்னை மரங்கள் வைத்து வளர்த்து வருகிறார்.
தென்னை மரங்களுக்கு கீழ் தகர சீட்டு கொண்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்புகளில் வடமாநிலத்தவர்கள் தங்கி அங்குள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அப்போது செந்தில்குமார் தோட்டத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தின் மீது திடீரென இடி விழுந்தது. இதில் அந்த தென்னை மரம் தீப்பற்றி எறிய தொடங்கியது. இதை தொடர்நது மரத்தில் இருந்து நெருப்பு பொறிகள் கீழே இருந்த குடியிருப்பு பகுதியின் மீது விழுந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்த வர்கள் உடனடியாக பெரு ந்துறை தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரி வித்தனர். நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் தென்னை மரத்தில் ஏற்பட்ட தீயை போராடி அணை த்தனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் தீ பரவாமல் தடு த்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்