என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மானியத்துடன் தளவாட கருவிகள்"
- ஈரோடு பகுதியில் 568 ஏக்கரிலும், தாளவாடி பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் புதிதாக பட்டு வளர்ப்பு சாகுபடிக்குள் வந்துள்ளனர்.
- ஈரோடு உதவி இயக்குனர் அலுவலகத்தின் கீழ் 100 விவசாயிகள், தாளவாடி பகுதியில் 15 விவசாயிகளுக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் குச்சி வெட்டும் எந்திரம், புழு வளர்ப்பு தளவாடங்கள் வழங்கப்படும்.
ஈரோடு:
பட்டு வளர்ச்சி துறை ஈரோடு உதவி இயக்குனர் சிவநாதன், தாளவாடி உதவி இயக்குனர் திலகவதி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் பெரும்பகுதி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 5,480 ஏக்கரிலும், தாளவாடி பகுதியில் 3,000 ஏக்கருக்கு மேல் மல்பெரி சாகுபடி செய்து பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.
நடப்பாண்டில் ஈரோடு பகுதியில் 568 ஏக்கரிலும், தாளவாடி பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் புதிதாக பட்டு வளர்ப்பு சாகு படிக்குள் வந்துள்ளனர்.
தற்போது வெண் பட்டுக்கூடு ஒரு கிலோ 650 முதல் 750 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையாகிறது. சேதமடைந்த சுமாரான பட்டுக்கூடுகள் கூட ஒரு கிலோ 580 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர்.
கோபிசெட்டிபாளையம், தாராபுரம், காங்கேயம் பகுதியில் 'மொபைல் மார்க்கெட்டிங் பணியாளர்கள்' நியமித்துள்ளதால் பட்டு உற்பத்தி அமைப்பு உள்ள இடத்துக்கு அருகிலேயே அவற்றை விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்ல ஏற்பாடு செய்கிறோம். இதனால், விவசாயிகள், வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது.
விவசாயிகளை ஊக்கப்படுத்தி பட்டு வளர்ப்பு சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு தலா ரூ.72,500 மதிப்பிலான தளவாட கருவிகள் வழங்குகிறோம்.
இந்தாண்டும் ஈரோடு உதவி இயக்குனர் அலுவலகத்தின் கீழ் 100 விவசாயிகள், தாளவாடி பகுதியில் 15 விவசாயிகளுக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் குச்சி வெட்டும் எந்திரம், புழு வளர்ப்பு தளவாடங்கள் வழங்கப்படும்.
கூடுதலாக மினி கட்டர், மருந்து அடிக்கும் ஸ்பிரேயர் போன்றவை வழங்க உள்ளோம். மீதமுள்ள தொகைக்கு பிற உபகரணங்கள் வழங்கப்படும். இவற்றுக்கு டெண்டர் முடிந்துள்ளதால் விரைவில் விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்