என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மனைவி பிரிந்து சென்றதால்"
- விஜய் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண் டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கரு ங்கல்பாளையம் கக்கன் நக ரைச் சேர்ந்தவர் விஜய் (வயது 28). இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இவரது மனைவி தீபா (23). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
விஜய்க்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்து ள்ளது. இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகரா றில் ஈடுபடுவார்.இதனால் தீபா கணவரிடம் கோபி த்துக் கொண்டு கரூரிலுள்ள அவரது பெற்றோர் வீட்டி ற்கு குழந்தைகளை அழை த்துக் கொண்டு சென்று விட்டார்.
இதையடுத்து மன உளை ச்சலில் இருந்த விஜய் மனைவி தீபாவிற்கு போன் மூலம் தொடர்பு கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வரு மாறு அழைத்தார். அதற்கு தீபா குடிப்பழக்கத்தை விட் டால் தான் நான் வீட்டுக்கு வருவேன் என்று கூறினார்.
இந்நிலையில் சம்பவ த்தன்று மன வேதனையில் இருந்த விஜய் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண் டார். இதையடுத்து உறவின ர்கள் விஜயின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்த னர்.
பின்னர் இதுகு றித்து தீபா கருங்கல்பாளை யம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அப்போது பெருந்துறை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
- இந்த நிலையில் சம்பவத்தன்று சத்யாவுக்கும் பழனிச்சாமிக்கும் தகராறு ஏற்பட்டது.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்துள்ள கரண்டிபாளையம், முருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் பழனிச்சாமி (வயது 35).
இவருக்கு திருமணமாகி சத்தியா என்ற மனைவியும், அபிஷேக் என்ற மகனும், அபிநயா என்ற மகளும் உள்ளனர். பழனிச்சாமிக்கும், சத்யாவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பழனிச்சாமி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தற்கொலை முயற்சி யில் ஈடுபட்டார். அப்போது பெருந்துறை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில் சம்பவ த்தன்று சத்யாவுக்கும் பழனிச்சாமிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் சத்தியா கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் சதயா மீண்டும் வீட்டுக்கு வர வில்லை.
இதனால மன வேதனை யில இருந்த பழனிச்சாமி நேற்று வீட்டின் சமையல் அறையில் தூக்கு மாட்டி கொண்டார். இதனைக் கண்ட அவரது மகன் அபிஷேக் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் பழனிச்சாமியை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாகடர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தார்.
இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- சதீஷ்குமார் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்தார்.
- மனைவி பிரிந்து சென்றதால் மன வேதனையில் இருந்த சதீஷ்குமார் அதிக அளவில் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
பவானி:
பவானி அருகே உள்ள சித்தோடு குட்டை தயிர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (39). இவர் சத்தியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
சதீஷ்குமார் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் சத்தியா கணவரிடம் கோபித்து கொண்டு தனது மகனை அழைத்து கொண்டு கேரளாவில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதையடுத்து மனைவி பிரிந்து சென்றதால் மன வேதனையில் இருந்த சதீஷ்குமார் அதிக அளவில் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று சதீஷ்குமார் வீட்டில் உள்ள ஒரு அறை யில் இறந்து கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சித்தோடு போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து அவரது உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை நடத்தினர்.
இதில் அவர் மனைவி பிரிந்து சென்றதால் அதிக அளவில் மது குடித்து இறந்தது தெரிய வந்தது.
இது குறித்து சதீஷ்குமாரின் மனைவி சத்தியாவுக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுதார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்