என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குமரி மாணவி"
- சமூக வலை தளம் மூலம் பழகி மாயமானார்
- வாலிபரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 9- ம் வகுப்பு மாணவி ஓருவர், கடந்த மாதம் 21-ந் தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றார்.
அதன்பிறகு அவர் மாலை யில் வீடு திரும்பவில்லை.மாணவியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி யும் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவியின் தந்தை குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் திருப்பூர் மாவட்டம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த லட்ச பிரபு (வயது 22) என்ப வருடன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் மாணவி தங்கியிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் மாணவியையும், அவருடன் இருந்த வாலிபரையும் மீட்டு குளச்சல் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசா ரணையில் மாணவி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் லட்சபிரபுவுடன் பழகி இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து மாணவியை போலீசார் மருத்துவ பரிசோ தனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லட்ச பிரபுவை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்