என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முதல்-அமைச்சருக்கு நன்றி"
- பணியாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் ரூ.32.20 லட்சம் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
- மனுநீதி நாள் முகாமில், தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபா ன்மையினர் நலத்துறையின் சார்பில், இதுவரை 529 பயனாளிகளுக்கு கிராமப்புற பெண் கல்வி ஊக்க த்தொ கையாக ரூ.3.26 லட்சமும், 540 பயனாளி களுக்கு உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் ரூ.32.20 லட்சம் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர 431 பயனாளி களுக்கு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் ரூ.50 லட்சம் மதிப்பிலும், 129 பயனாளிகளுக்கு கிறுஸ்துவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் ரூ.22 லட்சம் மதிப்பிலும், 4,898 பயனாளி களுக்கு ரூ.152.28 லட்சம் மதிப்பில், கல்வி உதவி த்தொ கை வழங்கப்பட்டுள்ளது.
2021-2022-ம் கல்வியாண்டில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் 1,294 மாணவி யர்களுக்கு சார்ந்த 1,082 மாணவர்களுக்கு மற்றும் என மொத்தம் ரூ.121 லட்சம் மதிப்பில் 2,376 மிதிவண்டி களும், மிக பிற்படுத்தப்ப ட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் இனத்தைச் சார்ந்த ஏழை, எளிய 68 மகளிருக்கு ரூ.3.76 லட்சம் மதிப்பில், தையல் எந்திரம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தையல் எந்திரம் பெற்று பயனடைந்த பயனாளி மேக்லின் சத்யபிரியா கூறியதாவது:-
நான் எனது கணவருடன் குன்னூர் மவுண்ட் பிளசண்ட் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். நான் குன்னுார் உப்பாசி எம்.பி.ஏ பாலிடெக்னிக்கில் தையல் பயிற்சி பெற்றேன். எனது ஊரில் நடந்த முகாமில் தையல் எந்திரம் வேண்டி விண்ணப்பித்தேன்.
அதனைதொடர்ந்து, எனக்கு பிற்படுத்தப்ப ட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறையின் சார்பில், அதிகரட்டி பேரூராட்சி காட்டேரி கிராமத்தில், நடந்த மனுநீதி நாள் முகாமில், தையல் எந்திரம் வழங்கப்பட்டது. இதன் மூலம் தையல் தொழில் செய்து வருகிறேன். இதில் வரும் வருமானம் எனக்கும், எனது குடும்பத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என்னைப் போன்றவர்கள் சுய தொழில் செய்து வாழ்க்கையில், முன்னேற உதவிய முதல்-அமைச்ச ருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
தையல் இயந்திரம் பெற்ற ஹரிப்ரியா கூறுகையில், நான் கோத்தகிரியில், உள்ள காஸ்ட்லி எஸ்டேட்டில் வசிக்கிறேன். எனது கணவர் சிவா லாரி டிரைவராக உள்ளார். எங்கள் குடும்பம் எளிமையான குடும்பம். முதல்-அமைச்சரின் இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்படுத்தப்படுவதை உறவினர்கள் மூலம் தெரிந்து கொண்ட நான், அதற்காக விண்ணப்பம் செய்திருந்தேன். இதனை பரிசீலனை செய்த அதிகாரிகள், எனக்கு விலையில்லா தையல் எந்திரத்தினை வழங்கினர். இதன் மூலம் நான் துணியாலான பைகளை தைத்து, வாழ்வாதாரத்தில் முன்னேறி வருகிறேன். எங்களின் இந்த முன்னேற்றத்திற்கு உதவிய முதல்-அமைச்சருக்கு நன்றி என்றார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழக அரசு, பிற்படு த்தப்பட்ட, மிகப்பிற்படு த்தப்பட்ட/ சீரமரபினர் மற்றும் சிறுபா ன்மையின சமூகத்தினர் பயன் பெறும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி, வாழ்வாதராம் பொருளா தாரம் முன்னேற்றம் அடைந்த நீலகிரி மாவட்ட மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையையும் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்
- மேலும் ஒரு சலுகையாக மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாதாந்திர உதவித்தொகை ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கியும் உத்தரவிட்டுள்ளார்
புதுக்கோட்டை:
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவரும், நல வாரிய உறுப்பினருமான ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் ரெ.தங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றதோடு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையையும் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.
மாற்றுத்திறனாளிகளின் நீண்டநாள் கனவான மெரினா கடற்கரையில் சிறப்பு பாதை அமைத்து கடல் நீரில் தங்களது பாதங்களை பதித்து மகிழ்ச்சியை அலங்கரிக்க செய்தாா்.
இதனை தொடர்ந்து இலவச வீட்டுமனை பட்டா, மாநக போக்குவரத்து பேருந்துகளில் துணையுடன் சென்றுவர இலவச பயணச்சலுகை, 5 சதவீத வீடு வழங்க அரசாணை பிறப்பித்தல், சாலை ஓர ங்களில் வியபாரம் செய்ய அனுமதி, திருமண உதவித்தொகையை ரொக்கமாக வழங்க அரசாணை, அரசு வளாகங்களில் ஆவின் பாலகம் அமைக்க வாடகை முன்தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தல்,
இந்து சமய அறநிலைய கோவில்களில் சீர் வரிசையுடன், இலவச திருமணம் நடத்திட அரசாணை பிறப்பித்தல், சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு மாத மதிப்பூதியம் ரூ.14 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கி அர சாணை வெளியிடல் போன்ற வரலாற்று திட்டங்களோடும், மேலும் ஒரு சலுகையாக மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாதாந்திர உதவித்தொகை ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கியும் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் சார்பாக நன்றி தெரிவித்து மகிழ்கின்றேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்