search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நினைவுதினம்"

    • பேராசிரியர் அன்பழகனின் 5-ம் ஆண்டு நினைவு தினம்.
    • அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் பேராசிரியர் அன்பழகனின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காட்பாடி தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் அன்பழகன் உருவப் படத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது என அமித்ஷா பேசியது குறித்து கேட்டதற்கு, பெரிய மனிதர்கள் எது வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம் என்றார்.

    மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியில் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொள்ள வேண்டும்-அமித்ஷா பேசியது குறித்து கேட்டதற்கு, `சொல்லுதல் யாவருக்கும் எளிய அரியவாம்' என திருக்குறளை மேற்கோள் காட்டினார்.

    • பெரியார், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது
    • தே.மு.தி.க. அலுவலகத்தில் பெரியார், எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

    அரியலூர்

    திராவிட கழக தலைவர் பெரியார், அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜிஆர், ஆகியோர் நினைவு தினத்தை முன்னிட்டு அரியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திராவிடர் கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மண்டல தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரியார் சிலைக்கு மாநில பொறுப்பாளர் தனக்கோடி மருதவாணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் விஜய பார்த்திபன், நகரச் செயலாளர் கூத்தாண்டம் கார்த்திக் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர் கழகம் சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு அமைப்புச் செயலாளர் கலைவாணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தே.மு.தி.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் இராமஜெயவேல் தலைமையில் பெரியார், எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.




    ×