என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முயன்ற வாலிபர்"
- கிருஷ்ணகுமார் வீட்டில் பேனில் தூக்குபோட்டு கொண்டார்.
- இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
சத்தியமங்கலம் அடுத்த செண்பகபுதூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 38). இவருக்கு திருமணமாகி கோமதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
கிருஷ்ணகுமாருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போனில் மனைவியுடன் தகராறு செய்து கொண்டு கிருஷ்ணகுமார் வீட்டில் தூக்குபோட்டு கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பினனர் அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதையடுத்து கிருஷ்ணகுமாரின் மனைவி கோமதி அவருடன் கோபித்து கொண்டு தனது மகள்களுடன் பு.புளியம்பட்டியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் கிருஷ்ணகுமார் மீண்டும் நேற்று மதியம் வீட்டில் பேனில் புடவையால் தூக்குபோட்டு கொண்டார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்