search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன ஓட்டுனர்"

    • 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்க வேண்டும்,
    • அடுத்த கட்டமாக 15-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்க குமரி மாவட்ட நிர்வாகிகள் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம் இன்று நடந்தது.

    புதிய வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்க வேண்டும், அனைத்து துறைகளிலும் உள்ள ஓட்டுனர் காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்துடன் நிரப்ப வேண்டும்.

    ஓட்டுனர்களுக்கு தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தம் அமல்படுத்த வேண்டும், கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    இதுபற்றி சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, "எங்கள் சங்கத்தில் சுமார் 150 பேர் உள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் மட்டும் 35 பேர் பணியாற்றுகிறார்கள். இவர்கள் அனைவருமே கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினார்கள். எங்கள் கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டம் நடந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக 15-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதன்பிறகு 22-ந்தேதி மாநில அளவில் கோட்டையை நோக்கி பேரணி நடக்கிறது" என்றனர்.

    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை கருத்தில் கொண்டு நடத்தப்பட்டது.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் பெருமாநல்லூர் நால்ரோடு போக்குவரத்து காவல் நிலையம் அருகில் வாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதனை பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறை மற்றும் ரோட்டரி சங்கம், திருப்பூர் தி ஐ பவுண்டேஷன் ஆகியன இணைந்து நடத்தியது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இம்முகாமில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட காவல்துறை, அவிநாசி காவல் உட்கோட்டம், பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறையினர் செய்திருந்தனர்.

    ×