என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ெதாழிலாளர்கள்"

    • மின்வாரிய தொழிலாளர்கள் கூட்டம் நடந்தது.
    • கேங்மேன் பணியாளர்களை கள பணி உதவியாளராக நியமிக்க வேண்டும்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் மண்டல பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் சசாங்கன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரவி, வரதராஜன், ஜேம்ஸ் கென்னடி முன்னிலை வகித்தனர்.

    மண்டல தலைவர் கண்ணன் வரவேற்றார். மாநில துணை பொதுசெயலாளர் பாரி சிறப்புரையாற்றினார். ஒப்பந்ததொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கேங்மேன் பணியாளர்களை கள பணி உதவியாளராக நியமிக்க வேண்டும். தரம் உயர்ந்த மற்றும் புதிய துணை மின்நிலையங்களில் பணியாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட நிர்வாகி வசந்த்குமார், அய்யர்தேவர், அந்தோணி மற்றும் ஜனதா தளம் நிர்வாகிகள் செல்லப்பாண்டி, ஜெயபிரகாசம், ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×