என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருக்கல்யாண"
- பரமத்தி வேலூர் நல்லியாம்பாளையம் அருள்முருகன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது.
- 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்::
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நல்லி
யாம்பாளையம் அருள்முருகன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது.
உற்சவ விழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, கலச பூஜை, ஊஞ்சல் உற்சவம், மாலை மாற்றுதல், காயத்திரி ஹோமங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் காலை 9.30 மணிக்கு
மேல் வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிர மணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடை பெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை கட்டப்பட்டது.
திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வள்ளி-தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். திருக்கல்யாண விழா ஏற்பாடு களை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- பரமத்திவேலூர் தெற்கு நல்லியாம்பாளையம் ஸ்ரீ அருள் முருகன் திருகோவில் கல்யாண சுப்ரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
- பரமத்தி–வேலூர் பேட்டை பகவதி அம்மன் ஆலயத்தில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு வைபவம் நேற்று மாலை நடந்தது. இதில் ஸ்ரீ அருள் முருகனை கோவிலுக்கு மக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தெற்கு நல்லியாம்பாளையம் ஸ்ரீ அருள் முருகன் திருகோவில் கல்யாண சுப்ரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
அதற்காக பரமத்தி–வேலூர் பேட்டை பகவதி அம்மன் ஆலயத்தில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு வைபவம் நேற்று மாலை நடந்தது. இதில் ஸ்ரீ அருள் முருகனை கோவிலுக்கு மக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
உற்சவர் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருமண விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்