search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.ராஜா"

    • மத்தியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்வது பற்றி பேசப்பட உள்ளது..
    • நிதிஷ்குமாருக்கு துணை பிரதமர் பதவி.

    இந்தியா கூட்டணி கட்சி தலைவர்ளும் இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

    இந்தியா கூட்டணி கட்சி களின் ஆலோசனை கூட்டத்தில் ராகுல், மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், சரத்பவார், தேஜஸ்வியாதவ், டி.ராஜா, சீதாராம் யெச்சேரி, உத்தவ் தாக்கரே உள்பட பலரும் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக மத்தியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்வது பற்றி பேசப்பட உள்ளது.

    இந்தியா கூட்டணி மத்தி யில் ஆட்சி அமைக்க வேண் டும் என்றால் மேலும் 38 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. இதை பெறுவதற்காக சந்திர பாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளை காங்கிரஸ் தலைவர்கள் தொடங்கி உள்ளனர்.

    ஆந்திரா, பீகார் இரு மாநி லங்களுக்கு சிறப்பு அந்தஸ்து தர தயாராக இருப்பதாக காங்கிரஸ் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நிதிஷ்குமாருக்கு துணை பிரதமர் பதவி வழங்கவும் தயாராக இருப்பதாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்தியில் ஆட்சி அமைப்பது யார்? என்ற விறு விறுப்பும், எதிர்பார்ப்பும் உருவாகி இருக்கிறது.

    ஆனால் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலக மாட்டோம் என்று சந்திர பாபு நாயுடுவும், நிதிஷ்குமா ரும் திட்டவட்டமாக அறி வித்துள்ளனர். என்றாலும் இன்று மாலை அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடப்பதால் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

    ஹாசன் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதி முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் வலம் வருகிறது. இதனால் ஒட்டுமொத்த தேவகவுடா குடும்பமும் நிலை குலைந்து போயுள்ளது.

    இந்த நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய தலைவர் டி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "பிரதமருக்கு நெருக்கமான ஒருவர் சம்பந்தப்பட்ட கொடூரமான வீடியோக்கள், ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் வெளியாகியுள்ளன. பெண்கள் பாதுகாப்புக்கு மோடியின் உத்தரவாதத்திற்கு இந்த வீடியோக்களே சாட்சி. இதுதான் மோடியின் 'நாரி சக்தி'யின் (பெண்கள் சக்தி) உண்மையான நிலை.

    பெண்களுக்கு எதிரான பிரஜ்வல் ரேவண்ணாவின் குற்றங்கள் பற்றி மோடி-ஷா வாய் மூடியுள்ளார்கள்.

    வீடியோக்கள் வெளியானதையடுத்து ரேவண்ணா நாட்டை விட்டு ஓடிவிட்டார், தப்பிக்க அவருக்கு உதவியவர் யார்? இந்த விடை நம் அனைவருக்குமே தெரியும்.

    பெண் மல்யுத்த வீரர்கள் பாலியல் துன்புறுத்தலின் போதும், மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட போதும் மோடி மவுனம் காத்தார். ஆயிரக்கணக்கான பெண்களை சீரழிவுக்கு ஆளாக்கிய இந்த கூட்டாளி குறித்தும் மோடி மௌனம் காப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.

    • நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைகள், பாராளுமன்றம் செயல்படும் விதம் மிகுந்த கவலை அளிக்கிறது.
    • பா.ஜ.க ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி பெற்று வருகின்றன.

    கோவை:

    கோவையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைகள், பாராளுமன்றம் செயல்படும் விதம் மிகுந்த கவலை அளிக்கிறது.

    பாராளுமன்ற பட்ஜெட்டை ஆழமாக ஆய்வு செய்து பார்த்தபோது இது ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட்டாகவும், செல்வந்தர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் பட்ஜெட்டாகவும் இருக்கிறது என்பது தெளிவாக புரிகிறது. ஏழை மக்களின் வாழ்வாதார நிலை உயர ஒதுக்கீடு இல்லை. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திலும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

    பா.ஜ.க ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி பெற்று வருகின்றன.

    அதானி ஊழல் மக்களிடம் பேசு பொருளாக மாறி உள்ளது. இதற்கு பிரதமர், நிதி அமைச்சர் தான் பொறுப்பு. அதானி பெயரை சொல்லி விவாதம் நடத்த நாடாளுமன்றத்தில் அனுமதிப்பதில்லை. அதானி ஊழல் சாதாரண ஊழல் இல்லை.

    எல்.ஐ.சி மற்றும் எஸ்பிஐ-யில் பெருமளவு நிதி பெற்று மோசடி செய்துள்ளது மக்கள் பணம். கடந்த காலங்களில் ஊழல் பெரிதளவில் பேசப்பட்டபோது நிதி அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். தற்போது மவுனம் சாதிக்கின்றனர்.

    மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளை பறிக்கின்றன. ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பா.ஜ.க. அரசை அகற்ற வேண்டும். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க அரசு வீழ்த்தப்பட வேண்டும். இதற்கு மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    கவர்னர்கள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறி உள்ளது. தற்போது சி.பி ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இது ஒன்றும் புதியது அல்ல. முன்னதாக எல். கணேசன், தமிழிசை சவுந்தர்ராஜன் கவர்னராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவை சேர்ந்தவர்கள் மட்டும் கவர்னர்களாக தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகின்றனர். பா.ஜ.க நியமிக்கும் கவர்னர்கள் மத்திய அரசின் பிரதிநிதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ரா. முத்தரசன் கூறும்போது, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க அரசையும், இடதுசாரி கட்சிகளையும் குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை. அவர் ஒரு கட்சியில் அடிமையாக இருந்து வந்தவர். பேனா நினைவு சின்னம் சர்ச்சை தேவையற்றது. ரூ.3 ஆயிரம் கோடிக்கு சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்ததற்கு விவாதம் எழுப்பாதவர்கள். பேனா சிலைக்கு பிரச்சினை எழுப்பி வருகின்றனர். கலைஞர் தனது எழுத்தாற்றல் மூலம் பல புரட்சிகரமான கருத்துக்களை வெளியிட்டவர். ஜனாதிபதி கோவையில் நடைபெற உள்ள சிவராத்திரி விழாவில் பங்கேற்காமல் தவிர்ப்பது நல்லது என்றார்.

    இதனை தொடர்ந்து வடகோவை குஜராத் சமாஜ் கூட்டரங்கில் மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு தேசிய பொது செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×