search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஞ்சல் அட்டை"

    • தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பி அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ரூ. 2 ஆயிரம் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி இன்று திண்டுக்கல் மாவட்ட த்தில் தாலுகா வாரியாக முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் பாலன், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் மீனாட்சி நாயக்க ன்பட்டி, செட்டிநாயக்க ன்பட்டி, சின்ன பள்ள ப்பட்டி, முத்தழகுபட்டி, ம.மு. கோவிலூர், பூதிபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோசங்க ளை எழுப்பி அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட கவுரவத்தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராகுல் காந்தி எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்.
    • சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டம் நடந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பில், மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் பீட்டர் தலைமையில் சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது.

    இந்நிகழ்விற்கு மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராஜ்குமார் எம்.எல்.ஏ, மாநில பொதுச் செயலாளர் கணிவண்ணன் கலந்து கொண்டு அஞ்சல் அட்டை போராட்டத்தை துவக்கி வைத்தனர்.

    நிகழ்வில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார், மாவட்ட எஸ்சி.எஸ்டி பிரிவு தலைவர் கிள்ளிவளவன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் முருகன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணன், வட்டாரத் தலைவர்கள் ஞானசம்பந்தம், பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் சிவராமன், நகர நிர்வாகிகள் மொரார்ஜி, தேவநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 64 அஞ்சல் அட்டைகளில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களை காட்சிப்படுத்தி கண் கவரும் ஓவியங்களை வரைந்துள்ளார்.
    • காகிதம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது.

    மானாமதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் பாண்டியன், ஓவிய ஆசிரியர். இவர் அஞ்சல் அட்டையை மக்கள் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அஞ்சல் அட்டைகளில் திருவிளையாடல் புராண ஓவியங்களை தீட்டியுள்ளார்.

    64 அஞ்சல் அட்டைகளில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களை காட்சிப்படுத்தி கண் கவரும் ஓவியங்களை வரைந்துள்ளார்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் தொலை தொடர்பு சாதனமாக அஞ்சல் அட்டைகள் பயன்படுத்தப்பட்டது. சாதாரண மக்களும் அஞ்சல் அட்டைகள் மூலம் தகவல்களை பரிமாறி கொண்டனர். மேலும் தங்களது படைப்புகளை அஞ்சல் அட்டைகளில் அனுப்பும் வழக்கமும் இருந்து வந்தது.

    தற்போது நவீன தொழில் நுட்பம் காரணமாக அனைத்தும் கணினி மயமாகி விட்டது. காகிதம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது. தற்போதும் தபால் நிலையங்களில் அஞ்சல் அட்டைகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் முன்பு போல் மக்கள் அதனை பயன்படுத்துவதில்லை.

    எனவே மக்கள் மீண்டும் அஞ்சல் அட்டைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதல் கட்டமாக அஞ்சல் அட்டைகளில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களை குறிக்கும் வகையில் படங்களை வரைந்துள்ளேன்.

    தொடர்ந்து பல்வேறு நூல்களில் இடம் பெற்றுள்ள அரிய கருத்துக்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அஞ்சல் அட்டையில் ஓவியமாக வரைய உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×