search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக மாவட்ட செயலாளர்கள்"

    • அ.தி.மு.க. தலைமை மாற்றம் என ஊடகங்களில் வரும் செய்தி தவறானவை.
    • அ.தி.மு.க.வில் தகுதி அறிந்து, திறமை அறிந்து பதவி கொடுக்கக் கூடியவர் எடப்பாடி பழனிசாமி.

    மதுரை:

    பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349-வது சதய விழாவையொட்டி மதுரை ஆணையூரில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வெங்கல சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வளர்மதி, எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் ராஜன் சொல்லப்பா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 40 இடங்களிலும் வெற்றி பெறும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பாராளுமன்ற தேர்தல் வெற்றி அச்சாரமாக விளங்கும். தேர்தல் முடிவுகளுக்கு பின்பு தங்கமணி, வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. செயல்படும் என்று தி.மு.க.வி.னர் கூறுவதில் உண்மையில்லை.

    எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையாக, ஒப்பற்ற தலைமையாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தலைமையாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க.வை கட்டிக் காக்கின்ற பெரும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். இரட்டை இலை, தலைமை கழகம், இரண்டரை கோடி தொண்டர்களுக்கு ஒரே தலைமையாக எடப்பாடி பழனிசாமி செயலாற்றி வருகிறார். எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய ராஜதந்திரியாக பணியாற்றி வருகிறார்.


    மற்றவர்களைப் போல தன்னை ஒப்படைப்பதற்காக அல்ல, அ.தி.மு.க.வை காப்பாற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளார். ஜெயலலிதாவைப் போல எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை காக்க பணியாற்றி வருகிறார். நீதிமன்றம், தேர்தல் ஆணையம், அ.தி.மு.க. ஆகியவைகளில் எடப்பாடி பழனிசாமி தனக்குரிய பாணியில் செயலாற்றுகிறார்.

    அ.தி.மு.க. தலைமை மாற்றம் என ஊடகங்களில் வரும் செய்தி தவறானவை. பாராளுமன்ற தேர்தலுக்காக அல்ல, அ.தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றுவது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். யாருக்கும் வேண்டுமானாலும் பதவி கொடுப்பதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் தகுதி அறிந்து, திறமை அறிந்து பதவி கொடுக்கக் கூடியவர் எடப்பாடி பழனிசாமி. மழைக்காலங்களில் பேரிடர் மீட்புத்துறையினர் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும் எந்த ஒரு அறிவிப்பையும் தி.மு.க. அரசு கொடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாங்கள் உள்ளதை உள்ளபடி பொதுச்செயலாளருக்கு தெரிவிப்போம் என்று கூறிவிட்டதால் சில மாவட்ட செயலாளர்கள் திக்கி திணறியதாக கூறப்படுகிறது.
    • பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ள விவரம், எங்கெங்கு என்ன பிரச்சனை என்பது பற்றி கேட்டு அதை எழுத்து பூர்வமாக எழுதி வாங்கி வருகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டிகள் அமைத்து இருக்கும் விபரங்கள் குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று மாலையில் ஆலோசனை நடத்துகிறார்.

    ஒவ்வொரு பூத்திலும் 3 விதமான கமிட்டிகள் அமைப்பது, கமிட்டிகளில் எவ்வளவு உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும்? உறுப்பினர்களை தேர்வு செய்வது எப்படி? பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டியது எப்படி? என்று ஏற்கனவே ஒவ்வொரு மாவட்ட செயலாளருக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தது.

    இது தவிர ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி நியமித்து இருந்தார். அவர்கள் பூத்வாரியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும், பூத் கமிட்டி உறுப்பினர்கள் முறையாக சேர்க்கப்பட்டுள்ளார்களா? போலி, பொய்யான தகவல்கள் கொடுக்கப்பட்டு உள்ளதா? என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும்.

    இன்று மாலையில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பூத் கமிட்டி பட்டியல்கள், அந்த விவரங்கள் அடங்கிய 'பென் டிரைவ்' ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கிறார்கள். அதை தொடர்ந்து 82 மாவட்டங்களின் செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    இதற்கிடையில் நேற்று மாலை முதல் ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்களையும் தனது வீட்டுக்கு வரவழைத்து தனித்தனியாக விபரம் கேட்டு வருகிறார்.

    பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ள விவரம், எங்கெங்கு என்ன பிரச்சனை என்பது பற்றி கேட்டு அதை எழுத்து பூர்வமாக எழுதி வாங்கி வருகிறார். இன்று மாலையில் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு அனைவரையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளார்.

    மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் பெரும்பாலும் இளம் நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்தவர்கள், அவர்கள் மாவட்டச் செயலாளர்கள் சொல்லும் விபரங்களை முழுயாக நம்புவதில்லை. கள ஆய்வை நேரடியாக நடத்தி மாவட்ட செயலாளர்களை தெறிக்கவிட்டு உள்ளனர்.

    தாங்கள் உள்ளதை உள்ளபடி பொதுச்செயலாளருக்கு தெரிவிப்போம் என்று கூறிவிட்டதால் சில மாவட்ட செயலாளர்கள் திக்கி திணறியதாக கூறப்படுகிறது. இன்று மாலையில் ஒவ்வொரு மாவட்ட செயலாளரையும் அந்த மாவட்ட பொறுப்பாளரையும் அமர வைத்து நிலவரங்களை கேட்க திட்டமிட்டுள்ளார். அப்போது மாவட்ட செயலாளரும், பொறுப்பாளரும் தகவல்கள் ஒத்து போனால் பிரச்சனை இல்லை. முரண்பாடுகள் இருந்தால் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் மாவட்ட செயலாளர்கள் தவிக்கிறார்கள்.

    • சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் 20-ந்தேதி மாலை 5 மணிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
    • கூட்டத்துக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    தமிழகத்தில் உள்ள கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக தங்களை தயார்படுத்தி வருகின்றன. கட்சியை வலுப்படுத்துவது, கூட்டணி அமைப்பது உள்ளிட்ட பணிகளையும் சத்தமின்றி செய்து வருகின்றன.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெறுகின்றன. கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

    தி.மு.க.வை பொறுத்தவரை பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கி விட்டது. பூத் கமிட்டி அமைத்து கூடுதல் உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தி.மு.க. தொடங்கி விட்டது. இதற்காக நிர்வாகிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

    இதே போல் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்தே பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடருவதாக மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். அதே போல் பா.ஜனதாவுடன் கூட்டணி தொடருவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    எனவே பா.ஜனதாவுடன் இணைந்து அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 20-ந்தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் 20-ந்தேதி மாலை 5 மணிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்துக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். இதில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 1 வருடமே இருக்கும் நிலையில் பூத் கமிட்டி அமைப்பது, கூடுதல் உறுப்பினர்களை சேர்ப்பது, முகவர்களை நியமிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    மேலும் கர்நாடக தேர்தல் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    ×