என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இலவச சீருடை"
- கடந்த கல்வியாண்டில் ரூ.177.44 கோடி மதிப்பிலான சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.
- நடப்பு கல்வி ஆண்டில் மாணவ- மாணவிகளுக்கு பள்ளி சீருடை வழங்குவதற்காக முதல்கட்டமாக ரூ. 100 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது
ஈரோடு:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 4 சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் நலத்துறை பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக சீருடைகள் வழங்கப்படுகிறது.
கடந்த கல்வியாண்டில் ரூ.177.44 கோடி மதிப்பிலான சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி சீருடை வழங்குவதற்காக முதல்கட்டமாக ரூ. 100 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கிரே பாலியஸ்டர் டையிங் நூல் 1866 டன்களும், டையிங் செய்யப்பட்ட காட்டன் வார்ப் நூல் 1,422 டன்களும் வாங்க டெண்டர் வைக்கப்பட்டுள்ளது.
டெண்டர் இறுதி செய்யப்பட்டதும் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் சர்ட்டிங் துணிகள் 5.23 கோடி மீட்டரும், பேண்ட் துணி 5 கோடி மீட்டரும், உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளனர். சமூக நல ஆணையத்தின் சார்பில் மகளிர் தொழில் துறை கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்