என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாராயம் பலி"
- வீரமலையில் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக நாகரசம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சாராயம் காய்ச்சி விற்ற சக்கரவர்த்தியை கைது செய்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வீரமலையில் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக நாகரசம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வீரமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வீரமலையை அடுத்த காட்டுகொல்லையில் உள்ள மலையடிவாரத்தில் அதேபகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி (வயது45) என்பவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அங்கிருந்து தயார் நிலையில் இருந்து 2லிட்டர் சாராய பாட்டில்களையும், 50 லிட்டர் சாராய ஊறல் பேரல்களையும் கீழே கொட்டி அழித்தனர். மேலும், சாராயம் தயாரிப்பதற்காக வைத்திருந்த பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சாராயம் காய்ச்சி விற்ற சக்கரவர்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்