search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறுதிபோட்டி"

    • 2-வது அரைஇறுதியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்தது.
    • மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    பிரிட்ஜ்டவுன்:

    20 ஓவர் உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. 20 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்றன. அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. லீக் முடிவில் சூப்பர்-8 சுற்றுக்கு இந்தியா, அமெரிக்கா (குரூப் ஏ) ஆஸ்திரேலியா, இங்கிலாந்து (பி), ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் (சி), தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் (டி) ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

    முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து, நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புவா நியூ கினியா, நேபாளம் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசமும், குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்காவும் இடம் பெற்றன.

    இதன் முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. முதல் அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தியது.

    2-வது அரைஇறுதியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்தது.

    கோப்பைக்கான இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுனில் நாளை நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்தியா 3-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2007-ம் ஆண்டு நடந்த முதல் 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    2014-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா, இலங்கையிடம் தோற்றது. இந்திய அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

    பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் உள்ள இந்தியா, சாம்பியன் பட்டத்தை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா (248 ரன்), சூர்யகுமார் யாதவ் (196 ரன்), ரிஷப் பண்ட் (171 ரன்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா (139 ரன், 8 விக்கெட்) அசத்தி வருகிறார். கோலி 7 ஆட் டத்தில் 75 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளார். அவர் ரன் குவிக்கும் கட்டாயத்தில் உள்ளார்.

    அதேபோல் ஷிவம் துபே அதிரடியாக விளையாட வேண்டும். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங் (15 விக்கெட்), பும்ரா (13 விக்கெட்), குல்தீப் யாதவ் (10 விக்கெட்), அக்சர் பட்டேல் (8 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

    மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி சாம்பியன் பட்டம் வென்று நீண்ட நாள் உலக கோப்பை தாகத்தை தீர்க்கும் ஆர்வத்தில் உள்ளது.

    பேட்டிங்கில் டி காக் (204 ரன்), டேவிட் மில்லர் (148 ரன்), கிளாசன் (138 ரன்), ஸ்டப்ஸ் (134 ரன்), மார்க்ரம் (119 ரன்), ஹென்ட்ரிக்ஸ் (109 ரன்) ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் நோக்கியா (13 விக்கெட், ரபடா (12 விக்கெட்), ஷம்சி (11 விக் கெட்), மகராஜ் (9 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

    இந்த தொடரில் இரு அணிகளும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. இந்தியா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தென்ஆப்பிரிக்கா சில ஆட்டங்களில் போராடியே வெற்றி பெற்றது.

    அதே வேளையில் கோப்பைக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா - இந்தியா மோதுகிறது.
    • இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    டி20 தொடரின் 2-வது அரைஇறுதியில் இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    கோப்பைக்கான இறுதிப் போட்டி பிரிட்ஜ்டவுனில் நாளை நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்நிலையில் நாளை நடைபெறும் இறுதிபோட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி பார்படாஸ் சென்றடைந்தது.

    இந்தியா 3-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2007-ம் ஆண்டு நடந்த முதல் 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    2014-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா, இலங்கையிடம் தோற்றது. இந்திய அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

    • இரு தொடரின் இறுதி போட்டியில் இந்திய கேப்டன்கள் மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன்கள் மோதின.
    • மகளிர் கிரிக்கெட்டில் இந்திய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஆஸ்திரேலிய கேப்டனாக மெக் லானிங் இடம்பெற்றிருந்தனர்.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதின. 'டாஸ்' ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

    இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது. கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து 10 ஆண்டுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில் மகளிர் ஐபிஎல் 2024 மற்றும் ஆடவர் ஐபிஎல் 2024 இறுதி போட்டியில் ஒரே மாதிரியான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. அது என்னவென்றால் இரு தொடரின் இறுதி போட்டியில் இந்திய கேப்டன்கள் மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன்கள் மோதின. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஆஸ்திரேலிய கேப்டனாக மெக் லானிங் இடம்பெற்றிருந்தனர்.

    அதேபோல ஆடவர் ஐபிஎல் தொடரில் இந்திய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐய்யர் மற்றும் ஆஸ்திரேலிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் இடம்பெற்றிருந்தார். இரு தொடர்களிலும் இந்திய கேப்டன்களே கோப்பை வென்று அசத்தினர்.

    மேலும் இரு தொடரின் இறுதி போட்டியில் டாஸ் வென்ற இரு ஆஸ்திரேலிய கேப்டன்கள் பேட்டிங்கை தேர்வு செய்தனர். அப்படி முதலில் ஆடிய இரு அணிகளும் 10.3 ஓவரில் 113 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய கேப்டன்கள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு தொடர்களிலும் 4 விஷயங்கள் ஒற்றுமையாக உள்ளது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் அரையிறுதிப்போட்டிகள் நடைபெற்றன.
    • ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் - சி.ஆர்., கார்மென்ட்ஸ் ஈகிள்ஸ் அணிகள் இறுதி போட்டி மோதுகின்றன

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை நிறுவன அணிகளுக்கான நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி (என்.பி.எல்.,), முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அரையிறுதிப்போட்டிகள் நடைபெற்றன.

    முதல் போட்டியில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் - ரிதம் நிட் இந்தியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஈஸ்ட்மேன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 126 ரன் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய ரிதம் 8 விக்கெட் இழப்புடன் 104 ரன் மட்டுமே எடுத்தது. 4 ஓவர் பந்து வீசி நான்கு விக்கெட் வீழ்த்திய ஈஸ்ட்மேன் அணி பவுலர் விஜயகுமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    மற்றொரு அரையிறுதியில் எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் - சி.ஆர்., கார்மென்ட்ஸ் ஈகிள்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய எஸ்.என்., அணி 8 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய சி.ஆர்., கார்மென்ட்ஸ் 124 ரன் எடுத்து வெற்றியை கைப்பற்றியது. 4 ஓவர் பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்திய சி.ஆர்., கார்மென்ட்ஸ் பவுலர் ஆல்பிரட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    வருகிற 9-ந் தேதி காலை 9 மணிக்கு, நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதி போட்டி நடக்கிறது. இதில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் - சி.ஆர்., கார்மென்ட்ஸ் ஈகிள்ஸ் அணிகள் மோதுகின்றன.

    போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு நிப்ட்-டீ பிரீமியர் லீக் சுழற்கோப்பை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு,இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு கோப்பை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.

    ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதுகளும் வழங்கப்பட உள்ளது.

    ×