search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி சிவா எம்பி"

    • துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
    • புத்தகங்கள் எல்லோருடைய கரங்களிலும் - அவற்றின் கருத்துக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தவழட்டும்! வெல்லட்டும்!

    சென்னை, கலைவாணர் அரங்கில் எம்.பி. திருச்சி சிவா எழுதிய 5 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

    நூல் வெளியீட்டு விழா குறித்து துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:-

    கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர் - தி.மு.கழகத்தின் மாநிலங்களவைக் குழுத்தலைவர் அண்ணன் திருச்சி சிவா அவர்கள் எழுதியுள்ள 5 நூல்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு வாழ்த்திய நிகழ்வில் கலைவாணர் அரங்கில் இன்று பங்கேற்றோம்.

    நம் கழகத்தலைவர் அவர்கள் திமுக இளைஞரணியை தொடங்கிய போது, அதன் வளர்ச்சிக்கு முன்வரிசையில் நின்று உழைத்தவர் அண்ணன் சிவா அவர்கள்.

    இளைஞரணி பயிற்சி பாசறைக் கூட்டம் உட்பட, தான் ஏறுகின்ற மேடைகள் தோறும் திராவிட இயக்கக் கொள்கைகளை ஓர் ஆசிரியரைப் போல அடுத்தடுத்த தலைமுறைக்கும் பாடமெடுக்கும் ஆற்றலுக்குச் சொந்தக்காரர்.

    தனது மேடைப்பேச்சு - 'மிசா' சிறைவாசம் - முரசொலிக் கட்டுரைகள் - பேட்டிகள் - வாட்ஸ் அப் வழி கருத்துக்கள் ஆகியவற்றை புத்தகங்களாகக் கொண்டு வந்திருக்கும் அண்ணன் சிவாவை வாழ்த்தியும், இச்சிறப்புக்குரிய நிகழ்வுக்கு வந்தோரை வரவேற்றும் உரையாற்றினோம்.

    அண்ணன் சிவா எழுதியுள்ள இப்புத்தகங்கள் எல்லோருடைய கரங்களிலும் - அவற்றின் கருத்துக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தவழட்டும்! வெல்லட்டும்!

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    • எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக.
    • யாருடைய மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் அஞ்சாமல் இயங்கி வருகிறோம்.

    சென்னை, கலைவாணர் அரங்கில் எம்.பி. திருச்சி சிவா எழுதிய 5 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    பிறகு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் திமுகவின் முகமாக திருச்சி சிவா திகழ்கிறார். கட்சி பணியில் தனது உழைப்பால் உயர்ந்தவர் திருச்சி சிவா.

    எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக. மிசா என்ற சிறைச்சாலையில் பயின்றவர்கள் நாங்கள்.

    யாருடைய மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் அஞ்சாமல் இயங்கி வருகிறோம்.

    ஒரு எம்.பி., எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக திருச்சி சிவா விளங்குகிறார்.

    75 ஆண்டுகளாக இயக்கம், கொடி, சின்னம் மாறவில்லை. என் மீதான அன்பின் மிகுதியால் கலைஞராக வாழும் தளபதி என கூறி இருக்கிறார்.

    என் மீதான அன்பின் மிகுதியால் கலைஞராக வாழும் தளபதி என கூறி இருக்கிறார். கலைஞராக அல்ல அவரின் வழியில் வாழ்ந்து வருகிறேன்.

    பொய்களை எப்படி உண்மையா மாற்றலாம் என யோசித்துக் கொண்டு எதிரிகள் வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நிலைக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.
    • சோனியா காந்தியின் பெயர் நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற வில்லை.

    புதுடெல்லி:

    பல்வேறு துறைகள் சார்ந்த பாராளுமன்ற நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களவை செயலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற நிலைக்குழுக்கள் மற்றும் தலைவர்களின் விவரங்கள் வருமாறு:-

    நிதி-பா.ஜ.க. எம்.பி. பர்த்ருஹரி மஹதாப்

    வெளியுறவு-காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

    பாதுகாப்பு-முன்னாள் மத்திய மந்திரி ராதாமோகன் சிங்

    உள்துறை-பா.ஜ.க. எம்.பி. ராதா மோகன் தாஸ் அகர்வால்

    பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு-தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுனில் தத்தரே எரிசக்தி-சிவசேனை எம்.பி. ஸ்ரீரங் பர்னே

    போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரம்-ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா.

    வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்-தெலுங்குதேசம் கட்சி எம்.பி. மாகுந்த்த ஸ்ரீநி வாசுலு ரெட்டி

    வேளாண், கால் நடை பராமரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல்-காங்கிரஸ் எம்.பி. சரண்ஜித் சிங் சன்னி

    கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ்-காங்கிரஸ் எம்.பி.சப்தகிரி உலாகா.

    தொழில் நிறுவனங்கள்-தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா

    நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம்-தி.மு.க. எம்.பி. கனிமொழி

    நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் உருக்கு-முன்னாள் மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர்

    நீர் வளங்கள்-பா.ஜ.க. எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி

    தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பம்-பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே.

    இதில், ராதா மோகன் சிங் தலைமையிலான பாதுகாப்புத் துறை சார்ந்த பாராளுமன்ற நிலைக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.

    நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் சோனியா காந்தியின் பெயர் எந்தவொரு நாடாளுமன்றக் குழுவிலும் இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருமணத்திற்கும், சொத்திற்கும், வாரிசுகளுக்கும் என தனி, தனியாக ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு முறை உண்டு.
    • பொது சிவில் சட்டத்திற்கு நாங்கள் எல்லா வகையிலும் எதிர்த்து நிற்போம்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொது கூட்டம் வில்லியனூரில் நடந்தது.

    பொதுகூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி, புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேசியதாவது:-

    ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு சட்டம் உண்டு. திருமணத்திற்கும், சொத்திற்கும், வாரிசுகளுக்கும் என தனி, தனியாக ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு முறை உண்டு.

    ஆனால் இது எல்லாவற்றையும் ஒன்றாக மாற்றி பொதுசிவில் சட்டம் என மாற்றினால் அதில் குழப்பம் வரும். சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் என்பது எங்களது கடமைகளில் முக்கியமான ஒன்று.

    அதனால் தான் யார் இது தொடர்பாக மனு கொடுத்தாலும் டெல்லியில் தி.மு.க. இருக்கும் வரை யாரும் அஞ்ச வேண்டாம். கவலை கொள்ள வேண்டாம் என கூறுவேன்.

    பொது சிவில் சட்டத்திற்கு நாங்கள் எல்லா வகையிலும் எதிர்த்து நிற்போம். எங்களை விட வேகமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார். பொது சிவில் சட்டம் வரக்கூடாது என்பதற்கான எல்லா முயற்சிகளையம் எடுக்க வேண்டும் என எங்களிடம் கூறியுள்ளார்.

    பொது சிவில் சட்டத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். 8 மாதத்தில் வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்துங்கள். நாம் எல்லாரும் ஒன்றாக வாழ வேண்டும் என்றால் எல்லாரையும் ஒன்றாக நடத்துகின்ற அரசாங்கம் வர வேண்டும்

    இவ்வாறு திருச்சி சிவா எம்.பி. பேசினார்.

    இதன்பின்னர் திருச்சி சிவா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடந்த சில காலமாகவே அதிகார மையங்களை வைத்து பா.ஜனதா அச்சுறுத்தும் போக்கு நடைபெற்று வருகிறது.

    தற்போது தமிழகத்தில் ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்று வரும் சோதனையின் காரணமாக எந்த வகையிலும் தி.மு.க.வுக்கு பின்னடைவு கிடையாது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பணி எளிதாகும்.

    அதன் மூலம் தி.மு.க. வெற்றி நிச்சயமாக கிடைக்கும். மக்கள் அனைத்தையும் உணர்ந்துள்ளனர். மத்திய அரசு சோதனை செய்வதற்கான நோக்கங்களையும், காரணங்களையும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து நாங்கள் எந்த வகையிலும் அச்சமடையவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×