search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்.சி.சி.முகாம்"

    • பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் 500 பேர் பங்கேற்ற முகாமில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது.
    • சிறுதானிய விழிப்புணர்வு பேரணியை கர்னல் சி.பி. உன்னி கிருஷ் ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் கல்லூரியில் 10 நாட்கள் என்.சி.சி. முகாம் நடைபெற்றது. கல்லூரி தலைவர் நீலமார்த்தாண் டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ, முதல்வர் ராஜேஷ் ஆகியோர் முன்னி லை வகித்தனர். நாகர்கோ வில் 11-வது பட்டாலியன் சார்பாக நடைபெற்ற இந்த முகாமிற்கு கர்னல் சி.பி.உன்னிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் 500 பேர் பங்கேற்ற முகாமில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக சிறு தானியம் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக ரோகிணி கல்லூரி பேராசிரியை ராதிகா சிறுதானிய பயன் பாடு பற்றி பேசினார். கடல் பாதுகாப்பு மற்றும் கடல் சார் தட்பவெப்ப நிலை குறித்து டேராடூன், இந்திய ராணுவ கல்லூரியில் ஜான்சன் உரை ஆற்றினார். இதற்கான பாதுகாப்பு உறுதிமொழியை ரோகிணி கல்லூரி முதல்வர் ராஜேஷ் என்.சி.சி. மாணவர் களிடையே வாசித்து ஏற்றுக் கொண்டார்கள். சிறுதானிய விழிப்புணர்வு பேரணியை கர்னல் சி.பி. உன்னி கிருஷ் ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் முகாம் அட் ஜூட்டன் கேப்டன் அஜிந்தர நாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராணுவ பயிற்சியாளர்கள், பள்ளி, கல்லூரி என்.சி.சி. அதிகாரி கள் மேற்கொண்டனர். பேரணியானது ரோகிணி கல்லூரியில் தொடங்கி வட்டக்கோட்டையில் முடிவ டைந்தது.

    ×