என் மலர்
நீங்கள் தேடியது "தென்ஆப்பிரிக்கா நியூசிலாந்து"
- நியூசிலாந்தை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் தென்ஆப்பிரிக்கா உள்ளது.
- நியூசிலாந்து அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 32-வது லீக் ஆட்டம் புனேயில் நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்கா- டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
தென்ஆப்பிரிக்கா அணி 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி இலங்கை (102 ரன்), ஆஸ்திரேலியா (134 ரன்), இங்கிலாந்து (229 ரன்), வங்காளதேசம் (149 ரன்), பாகிஸ்தான் (1விக்கெட்) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. நெதர்லாந்திடம் 38 ரன்னில் அதிர்ச்சிகரமாக தோற்றது.
நியூசிலாந்தை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் தென்ஆப்பிரிக்கா உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. நாளையும் இந்த வெற்றி நீடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா சேஸ் செய்வதில் திணறுகிறது. பாகிஸ்தானுக்கும் எதிராக இதை காண முடிந்தது. முதலில் ஆடினால் மட்டுமே அந்த அணி மிகப்பெரிய ஸ்கோரை குவிக்கிறது.
நியூசிலாந்து அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி தொடர்ச்சியாக 4 ஆட்டத்தில் (இங்கிலாந்து, நெதர்லாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான்) வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இந்தியா (4 விக்கெட்), ஆஸ்திரேலியா (5 ரன்) அணிகளிடம் தோற்றது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து 5-வது வெற்றியை பெறும் வேட்கையில் நியூசிலாந்து இருக்கிறது.
இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.
இரு அணிகளும் 71 முறை மோதியுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா 41-ல், நியூசிலாந்து 25-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் முடிவு இல்லை.
- தென் ஆப்பிரிக்கா அணி 1998-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது.
- நியூசிலாந்து அணி, சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை 2 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
9-வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இத்தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது.
இன்று மதியம் 2.30 மணிக்கு துபாயில் தொடங்கும் முதல் அரைஇறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
2-வது அரைஇறுதி போட்டி நாளை லாகூரில் நடக்கிறது. இப்போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் பி பிரிவில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா-ஏ பிரிவில் 2-ம் இடம் பிடித்த நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியில் ரிக்கல்டன், வான்டெர்து சென், கிளாசன், மார்க்ரம், டேவிட் மில்லர், முல்லர், யான்சன், ரபடா ஆகிய வீரர்கள் உள்ளனர். அந்த அணி லீக் போட்டியில் 3 ஆட்டத்தில் 2 வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ஆப்கானிஸ்தான், இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து ஆனது.
தென் ஆப்பிரிக்கா அணியில் பேட்டிங், பந்துவீச்சு சமபலத்துடன் உள்ளது. இதனால் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்கா அணி 1998-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. அதில் சாம்பியன் பட்டமும் வென்றது. அந்த அணி 2-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.
சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி, லீக் சுற்றில் பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகளை வீழ்த்தியது. இந்தியாவிடம் தோற்றது. நியூசிலாந்து அணியில் வில் யங், வில்லியம்சன், ரவீந்திரா, டாம் லாதம், பிலிப்ஸ் ஆகிய பேட்ஸ்மேன்களும், ஹென்றி, ஜேமிசன், வில்லியம் ஒர்ருக், பிரெஸ்வேல் ஆகிய பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.
அந்த அணி சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை 2 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. 2000-ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது. 2009-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- ரச்சின் மற்றும் வில்லியம்சன் பிலிப்ஸ் போன்ற வீரர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
- நாங்கள் ஒரு விக்கெட்டுக்கு 125 என்ற ஸ்கோரில் இருந்தோம். அதன் பிறகு நாங்கள் அடுத்தடுத்து சில விக்கெட்டுகள் இழந்தோம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிபோட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் வருகிற 9-ந் தேதி நடக்கிறது.
இந்நிலையில் எதிரணி வீரர்களுக்கு வாய்ப்புகளை நாங்களே வழங்கி அவர்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்து விட்டோம். இனி அந்த தவறை செய்யக்கூடாது என தோல்வி குறித்து டெம்பா பவுமா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
360 ரன்கள் அடித்தது இந்த ஆடுகளத்தில் ஒரு நல்ல ஸ்கோர் தான். இதுவே ஒரு 350 ரன்கள் என்ற இலக்கு இருந்திருந்தால் கூட நாங்கள் இந்த ஸ்கோரை எட்ட முடியும் என்று நம்பி இருப்போம். இன்றைய ஆட்டத்தில் கூட எங்கள் அணியில் ஒன்று அல்லது இரண்டு பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்கள் சேர்த்தோம்.
ஆனால் நானோ அல்லது வெண்டர் டூசன் களத்தில் கடைசி வரை நின்று இருந்து நியூசிலாந்து வீரர்கள் போல் செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் எங்களை கடும் அழுத்தத்தில் நியூசிலாந்து பவுலர்கள் வைத்திருந்தார்கள்.
ரச்சின் மற்றும் வில்லியம்சன் பிலிப்ஸ் போன்ற வீரர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். நாங்கள் ஒரு விக்கெட்டுக்கு 125 என்ற ஸ்கோரில் இருந்தோம். அதன் பிறகு நாங்கள் அடுத்தடுத்து சில விக்கெட்டுகள் இழந்தோம். இதன் மூலம் கடைசியில் வரும் வீரர்கள் பெரிய ஸ்கோரை துரத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். இனி வரும் காலங்களில் நாங்கள் இன்னும் ஆக்ரோஷமாகவும் அதிரடியாகவும் இருக்க வேண்டும்.
எதிரணி வீரர்களுக்கு வாய்ப்புகளை நாங்களே வழங்கி அவர்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்து விட்டோம். இனி அந்த தவறை செய்யக்கூடாது. ஆட்டத்தில் இருக்கும் முக்கிய தருணங்களை சரியாக பயன்படுத்தினாலே நம்மால் வெற்றி பெற முடியும்.
என்று பவுமா கூறியுள்ளார்.






