search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ மாணவர் தற்கொலை"

    • மன உளைச்சலில் காணப்பட்டார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் வேலப்பாடி, முகுந்தன் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் சூர்யா (வயது 19). இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    தற்போது கல்லூரியில் தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த தேர்வை சரியாக எழுதவில்லை என, சூர்யா மன உளைச்சலில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சூர்யா தனது வீட்டில், புடவை கொண்டு தூக்கில் தொங்கினார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×