search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா ஜேஎன் 1"

    • கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது சரிவடைந்துள்ளது.
    • 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா ஜே.என். 1 பரிசோதனை.

    இந்தியாவின் இன்சாகோக் (இந்திய சார்ஸ்-கோவி-2 ஜெனோமிக்ஸ் கன்சோர்டியம்) நாட்டில் 1104 பேருக்கு கொரோனா ஜே.என். 1 வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக அறிவித்து இருக்கிறது. எனினும், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் இந்தியாவில் 4 ஆயிரத்து 374 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், இந்த வாரம் 3 ஆயிரத்து 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்தியாவின் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா ஜே.என். 1 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    இதில் கர்நாடகாவில் 214 பேருக்கும், ஆந்திர பிரதேசத்தில் 189 பேருக்கும், மகாராஷ்டிராவில் 170 பேருக்கும் கேரளா மாநிலத்தில் 154 பேருக்கும் கொரோனா ஜே.என். 1 தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், ஜே.என். 1 தொற்றாளர்கள் அதிகம் கொண்ட மாநிலமாக கர்நாடகா உருவாகியுள்ளது.

    • ஒன்பது பேருக்கு கொரோனா ஜே.என். 1 வகை பாதிப்பு உறுதி.
    • மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 81,72,163 ஆக அதிகரிப்பு.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (டிசம்பர் 25) மட்டும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஒன்பது பேருக்கு கொரோனா ஜே.என். 1 வகை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இன்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட 28 பேரில் ஒருவருக்கும் ஜே.என். 1 வகை பாதிப்பு ஏற்படவில்லை. புதிதாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையுடன், அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 லட்சத்து 72 ஆயிரத்து 163 ஆக அதிகரித்து இருக்கிறது என மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.

    "மாநிலத்தில் இதுவரை 153 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 142 பேர் வீட்டில் இருந்தபடி தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். 11 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் மட்டும் ஐ.சி.யு.-வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மற்றவர்கள் மருத்துவ மேற்பார்வையில் உள்ளனர்," என்று சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

    ×