என் மலர்
நீங்கள் தேடியது "மாஃபா பாண்டியராஜன்"
- பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான்.
- எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற மாஃபா பாண்டியராஜன் அவரை சந்தித்து பேசி உள்ளார்.
விருதுநகரில் கடந்த 5-ந்தேதி இரவு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வெள்ளி வாள் வழங்கினர். பலரும் பொன்னாடை அணிவிக்க வந்தனர்.
இதே போல் விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் நந்தகுமாரும் பொன்னாடை அணிவிக்க வந்துள்ளார். வரிசையில் வராமல் முந்திக்கொண்டு அவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை ராஜேந்திரபாலாஜி கண்டித்ததாகவும், பின்னர் அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அவரிடம் எதற்காக இப்படி முந்தி கொண்டு வருகிறாய்? என சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது.
கூட்டத்தில் பேசிய கே.டி.ராஜேந்திர பாலாஜி,
பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான். வெவ்வேறு கட்சியில் இருந்து வந்தவர் பாண்டியராஜன். நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது என்று மிரட்டும் தொனியில் பேசினார்.
இந்த சம்பவம் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று இரவு சந்தித்தார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற மாஃபா. பாண்டியராஜன் அவரை சந்தித்து பேசி உள்ளார்.
மாஃபா பாண்டியராஜனை, ராஜேந்திரபாலாஜி விமர்சித்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான்.
- நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது.
சிவகாசியில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டத்தில் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:
* கட்சியில் மரியாதை வேண்டும் என கேட்பவர்கள் கட்சிக்கு செய்தது என்ன?
* தடை இருந்தால வெட்டி எறிந்து விடவும் தயங்க மாட்டேன்.
* பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான்.
* போகிற போக்கில் மிதித்து தள்ளி விடுவேன்.
* எனக்குள் ஓடுவது அ.தி.மு.க. ரத்தம். உன் உடலில் ஓடுவது என்ன ரத்தம்?
* வெவ்வேறு கட்சியில் இருந்து வந்தவர் பாண்டியராஜன்.
* நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது.
* நான் இருக்கும்போது பாண்டியராஜனுக்கு மேடையில் சால்வை போட்டால் நான் வேடிக்கை பார்ப்பதா?
* தன்னை குறுநில மன்னன் என விருதுநகரில் வந்த கூற முடியுமா? என்று கூறினார்.
- பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் பரவியதையடுத்து இந்த பதிவை தனது X தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்
- என் இறுதி மூச்சு உள்ளவரை அஇஅதிமுக மூலம் பொதுவாழ்வில் பங்களிப்பேன் என்பதை தெளிவு படுத்துகிறேன்
அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது X பக்கத்தில் "என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன் ! உண்மையுடன்!" என்று பதிவிட்டு தனது பழைய பதிவை மீண்டும் பகிர்ந்துள்ளார்.
3 வருடங்களுக்கு முன் பதிந்த அந்த பழைய பதிவில், "என் இறுதி மூச்சு உள்ளவரை அஇஅதிமுக மூலம் பொதுவாழ்வில் பங்களிப்பேன்" என்பதை தெளிவு படுத்துகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மாஃபா பாண்டியராஜன் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் பரவியதையடுத்து இந்த பதிவை தனது X தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.