search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்பு புகார்"

    • சதுப்புநிலத்தில் வீடு கட்டியதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.
    • 2000 சதுரடிக்கு மேல் அனுமதியின்றி வீடு கட்டியுள்ளார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பேத்துப்பாறை ஓரவிஅருவி அருகே நடிகர் பிரகாஷ்ரா ஜூக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதில் அனுமதியின்றி வீடு கட்டியதாக கடந்த 2023-ம் ஆண்டு கொடைக்கானலில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் எழுப்பப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. இதில் பிரகாஷ்ராஜ் வீடு கட்டுவதற்கு முறையான அனுமதி பெறவில்லை என தெரிய வந்ததால் ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது.

    இதனிடையே தற்போது பிரகாஷ்ராஜ் வீடு அருகே உள்ள வரங்காட்டு ஓடையை ஆக்கிரமித்து சதுப்புநிலத்தில் வீடு கட்டியதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். பொதுப்பாதையை மறித்து மின் வேலி அமைத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. 600 சதுரடி அளவிற்கு மட்டுமே வீடு கட்ட வேண்டிய இடத்தில் 2000 சதுரடிக்கு மேல் அனுமதியின்றி வீடு கட்டியுள்ளார். இதன் மூலம் அருகே உள்ள ஓடையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பேத்துப்பாறை, வயல்வெளி, பாரதி அண்ணா நகர், பொதுப்பாதையை பயன்படுத்தும் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். பகலில் திறக்கப்படும் பாதை இரவில் அடைக்கப்படுகிறது. இதனால் வன விலங்குகளில் இருந்து பயிர்களை பாதுகாக்க இரவில் செல்லும் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    எனவே ஓைடயை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், நடிகர் பிரகாஷ்ராஜ் பேத்துப்பாறை பகுதியில் பொதுப்பாதையை மறித்தும், ஓடையை ஆக்கிரமித்தும் வீடு கட்டி உள்ளதாக புகார் அளிக்கும் பட்சத்தில்அது குறித்து அளவீடு செய்து ஆக்கிரமிப்பு குறித்து விசாரிக்கப்படும். மேலும் ஓடை ஆக்கிரமிப்பு செய்திருந்தால் வருவாய்த்துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    ×