search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suraj Revanna"

    • ஜாமின் மனு மீதான விசாரணை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது.
    • மாதத்தின் ஒவ்வொரு 2-வது ஞாயிற்றுக்கிழமைகளிலும் விசாரணை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராக வேண்டும்.

    பெங்களூரு:

    எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ.வின் மூத்த மகன் சூரஜ் ரேவண்ணா (வயது 37). டாக்டரான இவர் தற்போது எம்.எல்.சி.யாக உள்ளார். இந்த நிலையில் சூரஜ் ரேவண்ணா, தனது கட்சி தொண்டர் உள்பட 2 பேரை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகார்களின்பேரில் ஒலேநரசிப்புரா போலீசார் கடந்த மாதம் (ஜூன்) 23-ந்தேதி சூரஜ் ரேவண்ணாவை கைது செய்தனர்.

    இந்த வழக்குகள் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அவர்கள் சூரஜ் ரேவண்ணாவை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை முடிவடைந்த நிலையில், சூரஜ் ரேவண்ணா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன் மீதான முதல் பாலியல் வழக்கில் ஜாமின் கேட்டு பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் சூரஜ் ரேவண்ணா தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனு மீதான விசாரணை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சூரஜ் ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அவருக்கு கோர்ட்டு தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதாவது ஜாமின் பெற்று வெளியே வந்த பிறகு புகார் அளித்த நபரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மிரட்ட கூடாது. மாதத்தின் ஒவ்வொரு 2-வது ஞாயிற்றுக்கிழமைகளிலும் விசாரணை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராக வேண்டும்.

    அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஆஜராகி இருக்க வேண்டும். மேலும் ரூ.2 லட்சத்திற்கு டெபாசிட் தொகையை உத்தரவாதமாக செலுத்துவது என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. முதல் வழக்கில் ஜாமின் கிடைத்தாலும் சூரஜ் ரேவண்ணா 2-வது பாலியல் வழக்கில் கைதாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    • பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
    • பெங்களூரு 42வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சூரஜ் ரேவண்ணா மனுத்தாக்கல் செய்தார்.

    பெங்களூரு:

    ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் எச்.டி.ரேவண்ணா. இவரது மனைவி பவானி ரேவண்ணா. இவர்களது மகன்கள் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் சூரஜ் ரேவண்ணா.

    சூரஜ் ரேவண்ணா எம்.எல்.சி. ஆவார். இந்த நிலையில் அவர் மீது வாலிபர் ஒருவர் ஓரினச்சேர்க்கை புகார் அளித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில் ஜாமின் கேட்டு, பெங்களூரு 42வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சூரஜ் ரேவண்ணா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி சிவகுமார் நேற்று விசாரித்தார்.

    அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரருக்கு ஜாமின் கொடுத்தால் சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்தி, சாட்சிகளை அழிக்க வாய்ப்புள்ளது. இதனால் அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.

    சூரஜ் தரப்பு வக்கீலும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவகுமார், சூரஜ் ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டார்.

    • சூரஜ் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட சேத்தன், பெங்களூருவில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார்.
    • புகார், ஹாசன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகமது சுஜிதாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் எச்.டி.ரேவண்ணா. இவரது மனைவி பவானி ரேவண்ணா. இவர்களது மகன்கள் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் சூரஜ் ரேவண்ணா. பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. ஆவார். அவர் தற்போது ஆபாச வீடியோ வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேலும் அவரால் பாதிக்கப்பட்ட மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகரைச் சேர்ந்த பெண்ணை கடத்தியதாக எச்.டி.ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் ஜாமினில் இருந்து வருகிறார். அதுபோல் இந்த வழக்கில் அவரது மனைவி பவானி ரேவண்ணாவும் முன்ஜாமின் பெற்றுள்ளார்.

    இதற்கிடையே சூரஜ் ரேவண்ணா எம்.எல்.சி. ஆனார். இந்த நிலையில் அவர் மீது ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு பகுதியைச் சேர்ந்த சேத்தன் என்பவர் ஓரினச்சேர்க்கை புகார் அளித்துள்ளார். ஆனால் அவர், சூரஜ் ரேவண்ணாவிடம் வேலை கேட்டு வந்ததாகவும், அப்போது சூரஜ் ரேவண்ணா வேலை இல்லை என்று கூறிவிட்டதால், ரூ.5 கோடி கேட்டு மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பணம் தரவில்லை என்றால் போலீசில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளிப்பேன் என்றும் சேத்தன், சூரஜ் ரேவண்ணாவிடம் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதுபற்றி ஒலேநரசிப்புரா டவுன் போலீஸ் நிலையத்தில் சூரஜ் ரேவண்ணாவின் நெருங்கிய நண்பர் சிவக்குமார் என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில் சேத்தன் மீது போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 384(மிரட்டி பணம் பறித்தல்) மற்றும் 506(மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே சூரஜ் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட சேத்தன், பெங்களூருவில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் சூரஜ் ரேவண்ணா தன்னை, ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவில் உள்ள ஒரு பண்ணை தோட்டத்து வீட்டுக்கு அழைத்ததாகவும் அங்கு வைத்து ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாகவும், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறியிருந்தார். அந்த புகார், ஹாசன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகமது சுஜிதாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அவர் அந்த புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி ஒலேநரசிப்புரா புறநகர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அந்த புகாரை பெற்ற போலீசார், சூரஜ் ரேவண்ணா மீது இந்திய தண்டனைச் சட்டம் 377(இயற்கைக்கு மாறான உறவு), 342(சட்டத்தை மீறி ஒருவரை அடைத்து வைத்தல்) மற்றும் 506(மிரட்டல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே நேற்று மாலை 5 மணி அளவில் சேத்தன், ஒலேநரசிப்புரா புறநகர் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று சூரஜ் ரேவண்ணா மீது புகார் அளித்தார்.

    இதற்கிடையே சேத்தன், சூரஜ் ரேவண்ணா தன்னை மிரட்டியது குறித்த ஆடியோ இருப்பதாக கூறி உள்ளதால், ஹாசன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சூரஜ் ரேவண்ணாவை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது ஆடியோ விவகாரம் குறித்து அவரிடம் போலீசார் கேட்டதாக தெரிகிறது. மேலும் சூரஜ் ரேவண்ணாவின் செல்போனையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதையடுத்து சூரஜ் ரேவண்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பிரஜ்வல் ரேவண்ணாவை அடுத்து சூரஜ் ரேவண்ணாவும் கைதாகி உள்ளது கர்நாடகாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சுரஜ் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக நபர் ஒருவர் புகார்.
    • போலி புகார் மூலம் பிளாக்மெயில் செய்வதாக சுராஜ் ரேவண்ணா போலீசில் புகார்.

    கர்நாடக மாநில முன்னாள் எம்.பி. பிரஜ்வால் ஆபாச வீடியோ வெளியானது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அவரது சகோதரரான சுரேஜ் ரேவண்ணா, தன்னை ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக போலியாக புகார் அளித்துள்ளார். மேலும் தன்னை மிரட்டியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுராஜ் ரேவண்ணாவை மிரட்டுவதாக இருவர் மீது போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

    சுராஜ் ரேவண்ணா மற்றும் அவருக்கு நன்கு அறிந்தவருமான சிவகுமார் ஆகியோர் சேத்தன் மற்றும் அவர் மைத்துனர் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளனர். ரேவண்ணாவை அவதூறாக பேசாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் வேண்டும் என்று கேட்டதாக அந்த புகாரில் குற்றம்சாட்டியுள்ளனர்.

    சேத்தன் சிவகுமாருடன் நட்பாக இருந்துள்ளார். அவருக்கு பாதுகாப்பான வேலைக்கு உதவி செய்யுமாறு சிவகுமாரிடம் கேட்டுள்ளார். சிவகுமாரும் சரி எனச் சொல்லி, சேத்தனை சுராஜ் ரேவண்ணாவிடம் மக்களவை தேர்தலின்போது அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

    ஜூன் 17-ந்தேதி சேத்தன் சிவக்குமாருக்கு போன் செய்து ரேவண்ணாவின் பண்ணை வீட்டிற்கு வேலை கேட்டு சென்றதாகவும், வேலை மறுக்கப்பட்டதாகவும் தெரிவிதுள்ளார். பின்னர் சிவக்குமாருக்கு போன் செய்து ஐந்து கோடி ரூபாய் தரவில்லை என்றால் ரேவண்ணா மற்றும் ரேவண்ணா குடும்பம் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளிப்பதாக மிரட்டியுள்ளார். அதன்பின் தனது மைத்துனருடன் சேர்ந்து 3 கோடி ரூபாய், 2.5 கோடி ரூபாய் தருமாறு தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

    ஜூன் 19-ந்தேதி சேத்தன் மீண்டும் போன் செய்து, ரேவண்ணா குடும்பம் மீது அவதூறு பரப்புவேன் என மிரட்டியுள்ளார். அதன்பின் சுராஜ் ரேவண்ணா, சிவக்குமார் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். அதேவேளையில் பண்ணை வீட்டில் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என சேத்தன் தெரிவித்துள்ளார்.

    "ஹசன் மாவட்டத்தில் உள்ள கன்னிகாடா பண்ணை வீட்டில் ஜூன் 16-ந்தேதி சுராஜ் ரேவண்ணா என்னுடைய தோள்பட்டையில் அவருடைய கையை போட்டார். அவருடைய கை எங்கே எங்கேயோ சென்றது. அதன்பின் என்ன நடக்கக் கூடாதோ, அது எனக்கு நடந்தது. ரேவண்ணாவின் உதவியாளர் இந்த விசயத்தை மூடி மறைக்க தனக்கு வேலை தருவதாகவும் தெரிவித்தார். மேலும் பிளாக்மெயில் செய்ய முயன்றார்.

    ஹோலேனராசிபுர டவுண் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றேன். ஆனால், எனக்கு புகார் மறுக்கப்பட்டது. அதன்பின் பெங்களூருவில் உள்ள டிஜி அலுவலத்தில் புகார் அளித்தேன்" எனத தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறுகையில் "யார் குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும், சட்டத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது" என்றார்.

    ×