என் மலர்
நீங்கள் தேடியது "ராஷ்மிகா"
- தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா.
- இவர் தற்போது 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ராஷ்மிகா மந்தனா
தொடர்ந்து இவர், மிஷன் மஜ்னு, புஷ்பா -2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே ராஷ்மிகா சமீபத்தில் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் தனது முதல் படமான கிரிக் பார்ட்டி பற்றி பேசியிருந்தார். அப்போது படத்தை தயாரித்த ரக்ஷித் ஷெட்டியின் நிறுவனத்தின் பெயரை சொல்லாமல் தவிர்த்தார் என்று கூறப்படுகிறது.

ராஷ்மிகா மந்தனா
இதனால் கோபமடைந்த கன்னட ரசிகர்கள் தன்னை வளர்த்து விட்ட கன்னட திரையுலகை மறந்துவிட்டு ராஷ்மிகா தற்போது தமிழ், இந்தியில் கவனம் செலுத்தி வருவதாக கூறி வருகின்றனர். மேலும், ராஷ்மிகா கன்னட திரையுலகில் நடிப்பதற்கு தடை விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஷ்மிகா மந்தனா
கிரிக் பார்ட்டி படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்திருந்த ரக்ஷித் ரெட்டியுடன் காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் வரை நடந்த நிலையில் ராஷ்மிகா சில காரணங்களால் திருமண முடிவில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரபல நடிகை ராஷ்மிகா, தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
- ராஷ்மிகா கன்னட பட உலகை அவமதித்து பேசியதாகவும், இதற்காக அவருக்கு கன்னட படங்களில் நடிக்க தடைவிதிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது.
தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ராஷ்மிகா கன்னட பட உலகை அவமதித்து பேசியதாகவும், இதற்காக அவருக்கு கன்னட படங்களில் நடிக்க தடைவிதிப்பது குறித்து அங்குள்ள தயாரிப்பாளர்கள் ஆலோசிப்பதாகவும் தகவல் பரவியது.

ராஷ்மிகா
இந்நிலையில் ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில், ''எனக்கு சில விஷயங்கள் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. தாங்க முடியாத வேதனையை தருகிறது. அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் வந்திருக்கிறது. நான் பேசாத விஷயங்களைப் பற்றி என் மீது விமர்சனங்கள் செய்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடுவது என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. நான் பேசாத விஷயங்கள் தவறாக சென்று எனக்கு எதிராக மாறுவதை பார்க்கிறேன்.

ராஷ்மிகா
இப்படி வரும் தவறான செய்திகள் ஒருபுறம் சினிமா துறையிலும், இன்னொருபுறம் எனக்கு இருக்கும் நல்ல தொடர்புகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. என்னோடு எனது உறவினர்கள், நண்பர்களும் இதனால் கவலைப்படுகிறார்கள். என்னை நான் மெருகேற்றிக் கொள்ள என்னை பற்றி வரும் நல்ல விமர்சனங்களை எப்பொழுதும் வரவேற்கிறேன். ஆனால் தேவையில்லாத விமர்சனங்களை நான் எதிர்கொள்ளும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது" என்றார்.
- நடிகை ராஷ்மிகா தற்போது விஜய்யுடன் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இவர் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ராஷ்மிகா கன்னட பட உலகை அவமதித்து பேசியதாகவும், இதற்காக அவருக்கு கன்னட படங்களில் நடிக்க தடைவிதிப்பது குறித்து அங்குள்ள தயாரிப்பாளர்கள் ஆலோசிப்பதாகவும் தகவல் பரவியது.

ராஷ்மிகா மந்தனா
மேலும், ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள 'காந்தாரா' திரைப்படத்தை பார்க்கவில்லை என்று கூறியதும் இவர் மீது கன்னட சினிமாவில் வெறுப்புணர்வு உண்டாக காரணமாக அமைந்தது. இந்த நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, " காந்தாரா திரைப்படத்தை பார்த்து விட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளேன். படம் வெளியான சமயத்தில் ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் பார்க்கவில்லை" என்று விளக்கமளித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா
மேலும், தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள அவர், "வாய்க்கு வந்தபடி பேசுறவங்க பேசட்டும். ஆனால், உண்மை அவர்களுக்கு தெரியாது. அதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. சினிமாவில் என் நடிப்பில் ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள் அதை திருத்திக் கொள்ள நிச்சயம் உழைப்பேன். சொந்த வாழ்க்கையை பற்றி பேசுபவர்களின் பேச்சை கண்டு கொள்ள மாட்டேன். இதுவரை எனக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை" எனக் கூறியுள்ளார்.
- வம்சி இயக்கத்தில் விஜய் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடந்தது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ராஷ்மிகா
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முடித்து விட்டு ராஷ்மிகா தன் காரில் புறப்பட்ட போது அவரை சில ரசிகர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தனர். ரசிகர்களைப் பார்த்த ராஷ்மிகா காரை நிறுத்தச் சொல்லி, "ஹெல்மெட் போட்டுக்கோங்க..." என அறிவுரைச் கூறிவிட்டு கிளம்பினார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் ராஷ்மிகா தங்கள் இதயத்தை வென்றதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
- நடிகை ராஷ்மிகா தற்போது விஜய்க்கு ஜோடியாக ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இவர் ’மிஷன் மஜ்னு’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் கார்த்தியின் 'சுல்தான்' படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா, தற்போது விஜய்க்கு ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ராஷ்மிகா
ராஷ்மிகா பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் நடித்திருந்த 'குட்பை'திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து 'மிஷன் மஜ்னு'திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராஷ்மிகா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஷ்மிகா
அவர் கூறியதாவது, "தென்னிந்திய திரைப்படங்களில் மசாலா சாங்ஸ், ஐட்டம் பாடல்கள் போன்ற டான்ஸ் மோடில் தான் பாடல்கள் வருகின்றன. பாலிவுட்டில் தான் மெலோடியான ரொமாண்டிக் பாடல்கள் வருகின்றன. மிஷன் மஜ்னு படத்தில் அப்படி நான் எதிர்பார்த்த ரொமாண்டிக் பாடல் உள்ளது. அதனை கேட்க நான் ஆவலாக உள்ளேன்" என்று கூறியுள்ளார்.

ராஷ்மிகா
இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்மிகா நேரத்துக்கு தகுந்தாற்போல் பேசுவதாகவும், கொஞ்சம் கூட பொறுப்புணர்வே இல்லையென்றும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் ராஷ்மிகா கன்னட திரையுலகம் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் ராஷ்மிகா.
- இவர் நடித்த புஷ்பா திரைப்படம் சினிமா பயணித்தில் ராஷ்மிகாவுக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னட மொழிகளில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடித்த புஷ்பா படம் ராஷ்மிகாவின் சினிமா பயணித்தில் திருப்புமுனையாக அமைந்தது. இந்தி மொழி படங்களிலும் நடிக்கிறார்.

ராஷ்மிகா
ஏற்கனவே கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியை ராஷ்மிகா காதலித்தார். 2017-ல் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் அடுத்த வருடமே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணத்தை ரத்து செய்து பிரிந்தனர். பின்னர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைத்து பேசப்பட்டார். இருவரும் மாலத்தீவுக்கு ஜோடியாக சென்று வந்ததாகவும் கிசுகிசுக்கள் வந்தன. இதனை இருவரும் மறுத்தார்கள்.

இந்நிலையில் 23 வயது இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மீது 26 வயது ராஷ்மிகாவுக்கு காதல் ஏற்பட்டு உள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஷ்மிகாவிடம் சுப்மன் கில் மீது உங்களுக்கு ஈர்ப்பு இருக்கிறதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆமாம் என்று கண்ணடித்தபடி சிரித்தார். இதையடுத்து இருவரும் காதலிப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. சுப்மனும் ஏற்கனவே ராஷ்மிகா மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா, நேற்று சமூக வலைத்தளத்தின் வாயிலாக உரையாடினார்.
- அப்போது விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு ராஷ்மிகா பளார் பதிலளித்தார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, கிரிக் பார்ட்டி என்ற கன்னடம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு மிகவும் பிரபலமடைந்தார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

ராஷ்மிகா நேற்று சமூக வலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் வாரிசு படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, விஜய்யை பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ராஷ்மிகா காதல் (லவ்) என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- நடிகை ராஷ்மிகா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
- இவர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசு பரவி வருகிறது.
தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னட மொழிகளில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடித்த புஷ்பா படம் ராஷ்மிகாவின் சினிமா பயணித்தில் திருப்புமுனையாக அமைந்தது. இந்தி மொழி படங்களிலும் நடிக்கிறார்.

விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா
ஏற்கனவே கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியை ராஷ்மிகா காதலித்தார். 2017-ல் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் அடுத்த வருடமே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணத்தை ரத்து செய்து பிரிந்தனர். பின்னர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைத்து பேசப்பட்டார். இருவரும் மாலத்தீவுக்கு ஜோடியாக சென்று வந்ததாகவும் கிசுகிசுக்கள் வந்தன.

ராஷ்மிகா -விஜய் தேவரகொண்டா
இதையடுத்து நடிகை ராஷ்மிகா தனது பிறந்த நாளின் போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் கையில் அணிந்திருந்த மோதிரம் விஜய் தேவரகொண்டாவின் விருப்பமான மோதிரம் என்றும் இருவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளதாகவும் விரைவில் மகிழ்ச்சியான செய்தியை ராஷ்மிகா கூறுவார் என்றும் ஊடகம் ஒன்று செய்தியை வெளியிட்டிருந்தது.
இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை ராஷ்மிகா அந்த ஊடகம் வெளியிட்டிருந்த பதிவை பகிர்ந்து 'ரொம்ப யோசிக்காதீங்க' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
- இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புஷ்பா -2'.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

புஷ்பா
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தில் நடிகர் பகத் பாசில் காட்சிகள் நிறைவு பெற்றுள்ளதாக இயக்குனர் சுகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து , இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் நடந்து வந்தது. அப்போது படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, அதில் நடித்த துணை நடிகர்கள், பேருந்து ஒன்றில் ஹைதராபாத் திரும்பினர். விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் நார்க்கட்பள்ளி என்ற இடத்துக்கு வந்தபோது, சாலையோரத்தில் நின்ற அரசு பேருந்து மீது நடிகர்கள் வந்த பேருந்து மோதியதாக கூறப்படுகிறது. இதில் பேருந்தில் இருந்த 2 நடிகர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நடிகர் விஜய் தேவரகொண்டா இளம் நடிகராக வலம் வருகிறார்.
- இவர் ராஷ்மிகாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
தெலுங்கு திரையுலகின் இளம் நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படம் வசூல் சாதனையை நிகழ்த்தியது. தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 'கீதா கோவிந்தம்' திரைப்படம் பல இளம் ரசிகைகளை கவர்ந்து. இப்படத்தில் ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இருவரும் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதற்கு இருவர் தரப்பில் இருந்தும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா சமூக வலைதளப் பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதில், ஒரு ஆணும், பெண்ணும் கைக்கோர்த்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'நிறைய நடக்கிறது. ஆனால், இது உண்மையில் சிறப்பானது. விரைவில் அறிவிக்கிறேன்' என்று விஜய் தேவரகொண்டா குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தேவரகொண்டா பதிவு
இதற்கு விஜய் தேவரகொண்டா தன் காதல் குறித்து அறிவிக்கவுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், அது ராஷ்மிகாவா? இல்லை சமந்தாவா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 'குஷி' திரைப்படத்தின் போது சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் நெருக்கமாக பழகியதாக தகவல் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.
- ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அனிமல்’.
- இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அனிமல் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'நீ வாடி' பாடலின் லிரிக் வீடியோ நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
Hua main ❤️
— Rashmika Mandanna (@iamRashmika) October 10, 2023
Out tomorrow..
this song is ????
And I personally love it in all the versions.. Hindi Kannada telugu tamil and Malayalam .. ???#HuaMain #Ammayi #Neevaadi #OhBhaale #Pennaale#AnimalTheFilm@AnimalTheFilm @AnilKapoor #RanbirKapoor @thedeol @tripti_dimri23… pic.twitter.com/JH7eADNoDs
- இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அனிமல்’.
- இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'நீ வாடி' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. ரன்பீர் கபூர் - ராஷ்மிகா ரொமான்ஸில் அசத்தும் இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.