என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "tasmac money robbery"
தேவதானப்பட்டி:
பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி கெங்குவார்பட்டி புஷ்பராணி நகரில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்றனர்.
நள்ளிரவு சமயத்தில் வாலிபர் ஒருவர் கடையின் பின்பக்கம் இருந்த சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்தார். பின்னர் அங்கிருந்த பணம் ரூ.6,800 மற்றும் மதுபாட்டில்களை எடுத்துக் கொண்டு தப்பி சென்றார்.
மறுநாள் காலை விற்பனையாளர்கள் கடையை திறக்க வந்தபோது பின்னால் சுவரில் துளை போட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது பணம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளைபோனது தெரிய வந்தது. இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் காமக்காபட்டியை சேர்ந்த ஞானசேகரன் என தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் ஞானசேகரனிடம் இருந்து பணம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பேரையூர்:
மதுரை, பெருங்குடி போலீஸ் சரகத்திற்குட்பட்ட வலையப்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு திருமங்கலம் கொடி மரத்தெருவைச் சேர்ந்த அப்துல் ரகு (வயது 44) என்பவர் மேலாளராகவும், முருகேசன் என்பவர் உதவியாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு இருவரும் கடையை மூடிவிட்டுச் சென்றனர்.
வலையப்பட்டியைச் சேர்ந்த இப்ராகிம்ஷா (48) என்பவர் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு இவர் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள கட்டிடத்தில் தூங்கச் சென்றதாக கூறப்படுகிறது.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.11 ஆயிரம் ரொக்கம், 144 மது பாட்டில்களை திருடினர்.
அப்போது சத்தம் கேட்டு எழுந்த இப்ராகிம்ஷா திருடன்.... திருடன்... என கூச்சலிட்டார். இதையடுத்து உஷாரான கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர்.
இது குறித்த புகாரின் பேரில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் பணம், மதுபாட்டில்களை திருடியவர்களை தேடி வருகின்றனர்.
கொடைரோடு:
திண்டுக்கல் அருகே கொடைரோடு மாலைய கவுண்டன்பட்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு நேற்று வியாபாரம் முடிந்ததும் விற்பனையாளர்கள் மற்றும் பாரில் வேலை செய்பவர்கள் கடையை பூட்டிச் சென்றனர்.
தோட்டத்து காவலுக்கு வெள்ளிமலை (வயது 45) என்பவர் மட்டும் இருந்தார். நள்ளிரவு சமயத்தில் இங்கு காரில் வந்த முகமூடி கும்பல் வெள்ளிமலையை கத்தியை காட்டி மிரட்டியது. மேலும் அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்து விட்டு கடையை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் சாவகாசமாக அமர்ந்து மதுகுடித்து கும்மாள மிட்டனர். அங்கிருந்த 240 மது பாட்டில்களையும் பணம் ரூ.900த்தையும் கொள்ளையடித்து அங்கிருந்து காரில் ஏறி தப்பிச் சென்றனர். முகமூடி அணிந்திருந்ததால் வந்தவர்கள் அடையாளம் தெரிய வில்லை. இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பொங்கல் பண்டிகை விற்பனை தொகையை விற்பனையாளர்கள் எடுத்துச் சென்றதால் பெருமளவு பணம் தப்பித்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அருகே யாகப்பகன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளை நடந்தது. தற்போது காவலாளி உள்ள கடையிலேயே அவரை மிரட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த வெப்பளாம்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டியை அடுத்த நம்பியாம் பட்டியை சேர்ந்த ஆனந்தன் (வயது 42), விற்பனையாளராகவும், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா புட்டிரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் (50) உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு இவர்கள் டாஸ்மாக் கடையில் வசூலான ரூ. 3 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தனர். ஊத்தங்கரை- அரூர் சாலையில் காட்டேரி பகுதியில் அவர்கள் சென்றபோது இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிவிட்டனர்.
துப்பாக்கி குண்டு பாய்ந்த ஆனந்தன் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் இருந்து 2 பால்ரஸ் குண்டுகள் அகற்றப்பட்டன.
காதில் குண்டு பாய்ந்து காயம் அடைந்த முருகன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், ஊத்தங்கரை டி.எஸ்.பி. (பொறுப்பு) தங்கவேல், தடயவியல் நிபுணர் மாணிக்கம் உள்பட பலர் நேரில் வந்து சம்பவ நடந்த இடத்தை பார்வையிட்டனர்.
பின்னர் ஐ.ஜி. பெரியய்யா போலீசாரிடம் கூறியதாவது:-
இது ஒரு சவாலான வழக்கு. இதை உடனடியாக கண்டுபிடிக்காவிட்டால் மேலும் கொள்ளை சம்பவங்கள் அதிகமாகி விடும். எனவே உடனடியாக இந்த வழக்கில் துப்புதுலக்கி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கொள்ளை குறித்து 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் எஸ்.பி.எம்.எல். என்று அழைக்கப்படும் சிங்கிள் பேரல் மஸ்லோடு கன் வகை துப்பாக்கி மூலம் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரையும் கொள்ளையர்கள் சுட்டது தெரியவந்து உள்ளது.
இந்த வகை துப்பாக்கிகளை உள்ளூரை சேர்ந்த மிருகங்களை வேட்டையாடும் நபர்கள் வைத்திருப்பது வழக்கம். எனவே கொள்ளையர்கள் உள்ளூரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
மேலும் கொள்ளை நடந்த இடத்தின் அருகே உள்ள செல்போன் டவரில் உபயோகத்தில் இருந்த செல்போன் நம்பர்களை இன்று போலீசார் கேட்டு வாங்கி உள்ளனர். அந்த செல்போன் எண்களை வைத்து துப்புதுலக்கும் பணியில் ஒரு தனிப்படையினர் ஈடுபட்டு உள்ளனர்.
இதேபோல சம்பவம் நடந்த இடம் அருகே அரூர்- அனுமன்தீர்த்தம் சாலையிலும், ஊத்தங்கரையில் இருந்து சிங்காரப்பேட்டை செல்லும் சாலையிலும் காட்டு பகுதி உள்ளது. இங்கு மிருகங்களை வேட்டையாட சிலர் கள்ளத்துப்பாக்கி வைத்து உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கள்ளத்துப்பாக்கிகளை ஒப்படைக்கும்படி வனத்துறையினரும், போலீசாரும் கேட்டுக் கொண்டபோது ஒருசிலர் மட்டுமே துப்பாக்கிளை ஒப்படைத்தனர். பலர் துப்பாக்கிகளை ஒப்படைக்கவில்லை. அவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு அவர்கள் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓசூர் பகுதியில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி கொள்ளை நடந்தது. தற்போது ஊத்தங்கரையில் டாஸ்மாக் ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு கொள்ளை நடந்து உள்ளது. இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் பீதியில் உள்ளனர்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காட்டேரி கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியையொட்டி அரசு மதுபான டாஸ்மாக் கடை அமைந்துள்ளது.
இந்த டாஸ்மாக் கடையில் தருமபுரி மாவட்டம் புட்டிரெட்டிப் பட்டியைச் சேர்ந்த முருகன் (வயது 50) என்பவர் விற்பனையாளராகவும், அரூர் நம்பிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (42) என்பவர் உதவி விற்பனையாளராகவும் பணி புரிந்து வருகின்றனர்.
இவர்கள் நேற்று இரவு மதுபான கடையில் கணக்கு சரிபார்த்து விட்டு 10.45 மணியளவில் கடையை பூட்டினர்.
அப்போது விற்பனை செய்த ரூ.3½ லட்சத்தை எடுத்து கொண்டு 2 பேரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி வந்தனர். வண்டியை ஆனந்தன் ஓட்டி வந்தார்.
அவர்கள் 2 பேரும் ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது பின்னால் மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக துரத்தி வந்ததை கண்டனர். உடனே ஆனந்தன் வண்டியை வேகமாக ஓட்டினார். அப்போது மர்ம நபர்கள் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரையும் வழிமறித்தனர்.
அவர்கள் முருகனையும், ஆனந்தனையும் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் தாக்கி பணத்தை முழுவதும் கொடுக்குமாறு கூறினர். அவர்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டதால் முருகன் பணப்பையை தராமல் தடுக்க முயற்சி செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் ஆனந்தனையும், முருகனையும் சுட்டனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த ரூ.3½ லட்சத்தையும் எடுத்து சென்றனர்.
இதில் முருகனுக்கு காதில் குண்டு பாய்ந்து காயம் அடைந்தார். ஆனந்தனுக்கு பின் முதுகு பகுதியில் குண்டு பாய்ந்தது. இதனால் இருவரும் வலியால் அலறி துடித்தனர். உடனே முருகன் தனது செல்போனில் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். அதற்குள் அக்கம்பக்கத்தினர் அந்த பகுதியில் திரண்டனர். நடந்த சம்பவத்தை பற்றி அவர்களிடம் 2பேரும் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வந்ததும் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக முருகனை தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கும், பின்முதுகு பகுதியில் குண்டு பாய்ந்ததால் அதனை அகற்ற ஆனந்தனை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரை துப்பாக்கியால் சுட்டு ரூ.3½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tasmac
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்