என் மலர்
நீங்கள் தேடியது "Transgender arrested"
- முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாகை மாவட்டம் வாழைக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 37). இவர் நாகை அடுத்த திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 ஆண் மகன் உள்ளார்.
கடந்த ஆண்டு எட்டுக்குடி ஊராட்சி வல்லம் வருவாய் வி.ஏ.ஓ.வாக ராஜாராமன் பணியாற்றியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இருந்தாலும் சில மாதங்கள் ராஜாராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியை தொடர்ந்தார்.
இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் ராஜாராமன் தனது மோட்டார் சைக்கிளில் நாகைக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து மாலையில் மோட்டார் சைக்கிளில் வாழைக்கரையில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார்.
ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் ராஜாராமனை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை நாகை செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அல்லது தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ராஜாராமன் மரணத்திற்கு இரண்டு திருநங்கைகள் காரணம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
அன்று இரவில் ராஜாராமன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த திருநங்கையர் நிவேதா, ஸ்ரீகவியை போலீசார் கைது செய்த மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
இதில், ராஜாராமன் செல்லூரில் போதையில் படுத்திருந்தபோது பணம், செல்போன், மோதிரம் பறித்து கொண்டு அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு திருநங்கைகள் தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
- மாணவர்களை அழைத்து சென்ற போது பஸ்சில் சிறு கோளாறு ஏற்ப ட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 திருநங்கைகளை தேடி வந்தனர்.
புதுச்சேரி:
மயிலாடுதுறை மாவட் டம், திருவிளையாட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன்(வயது32).இவர் நாகப்பட்டினம், தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். தினமும் இவர் நாகப் பட்டினத்தில் இருந்து செம்பனார்கோவில் வரை மாணவர்களை அழைத்து சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று காலை மாணவர்களை அழைத்து சென்ற போது பஸ்சில் சிறு கோளாறு ஏற்ப ட்டுள்ளது. அதனால் அன்று மாலை மோகன் பஸ்சை இயக்கவில்லை.
இரவு பஸ்சில் உள்ள கோளாறை சரி செய்து, மறு நாள் மாணவர்களை அழைத்து வருவதற்காக, நாகப்பட்டினத்தில் இருந்து செம்பனார் கோவிலுக்கு அன்று இரவு 10.30 மணிக்கு, காரைக்கால் டாக்டர் கலைஞர் புறவழி சாலை வழியாக சென்றார். அப்போது அந்த சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு ஐயனார் கோவில் அருகே பஸ்ஸை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க திருநங்கைகள் 2 பேர் திடீரென மோகனை வழிமறித்து, மோகன் கழுத்தில் அணிந்திருந்த 12 கிராம் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனால் அதிர்ச்சி யடைந்த மோகன், காரைக்கால் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 திருநங்கைகளை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை பஸ் நிலையம் அருகே நின்றிருந்த பவானி (வயது 35), சுவாதி (23) ஆகிய 2 திருநங்கைகளை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது, பஸ் டிரைவரிடம் நகையை பறித்ததை ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 12 கிராம் தங்கச் செயினை போலீசார் மீட்டனர்.
- திருநங்கை கைது
- ஒரு ரூபாய் நாணயம் கொடுங்கள் உங்களுக்கு ஆசீர்வதித்து தருகிறேன் என கூறினார்.
பீளமேடு:
கோவை விமான நிலையம் அருகில் உள்ள ஜி.ஆர்.ஜி பகுதியைச் சேர்ந்தவர் மரிய பிரதீப் (வயது 42).
இவர் சம்பவத்தன்று மதியம் தனது மனைவியுடன் கொடிசியா வளாகம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகனை அழைப்பதற்காக காரில் சென்று அங்கு நின்றிருந்தார். அப்போது அவரது காரின் அருகே மொபட்டில் 2 திருநங்கைகள் வந்தனர். அதில் ஒரு திருநங்கை மரிய பிரதீப்பிடம் சென்று பணம் கேட்டுள்ளார்.
மரிய பிரதீப் தனது பர்ஸில் இருந்து ரூ.10 எடுத்துக் கொடுத்தார். அப்போது அவர் ஒரு ரூபாய் நாணயம் கொடுங்கள் உங்களுக்கு ஆசீர்வதித்து தருகிறேன் என கூறினார். இதை அடுத்து மரிய பிரதீப் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து
கொடுத்தார். அவர் அதை வாங்கி ஆசீர்வதிப்பது போல நடடித்து மரிய பிரதீப்பின் பர்சில் வைத்து விட்டு அங்கு காத்திருந்த மற்றொரு திருநங்கையுடன் சென்றார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது அவரது பர்சில் இருந்த ரூ.8 ஆயிரம் மாயமாகி இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மரிய பிரதீப் அந்த திருநங்கைகளை தேடினார். ஆனால் அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து மரிய பிரதீப் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கவுண்டம்பாளை யம் சக்தி நகரை சேர்ந்த இள வஞ்சி (40) என்ற திருநங்கை பணத்தை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் இளவஞ்சியை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பாட்னா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் பெரம்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து ரெயில் புறப்பட்டு சென்றது. அப்போது ரெயிலில் இருந்த பயணிகளிடம் திருநங்கை ஒருவர் பணம் கேட்டார். அந்த ரெயிலில் பயணம் செய்த விசாகப்பட்டினத்தை சேர்ந்த சோனா சந்துரு என்பவரிடம் அவர் பணம் கேட்டு தொந்தரவு செய்தார்.
இதனால் அவருக்கு சோனா சந்துரு பணம் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கை, அவரிடம் இருந்த பணப்பையை நூதன முறையில் திருடிக்கொண்டு கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கிவிட்டார்.
திருவொற்றியூர் அருகே ரெயில் சென்றபோது பணப்பை காணாமல் போனதை கண்டு சோனா சந்துரு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ரெயிலில் இருந்து இறங்கிய அவர் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். அதில், ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் வைத்திருந்த கைப்பையை திருநங்கை திருடிச்சென்றதாக கூறி இருந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் திருநங்கையை தேடி வந்தனர். இந்தநிலையில், சோனா சந்துருவிடம் பணப்பையை திருடிச்சென்றது திருவொற்றியூர் மாட்டு மந்தையை சேர்ந்த திருநங்கை பிரீத்தி என்ற முனிசா (வயது 43) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்தை பறிமுதல் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.






