என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "wave"
- புதுவை கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி லாரி டிரைவர் பலியானார்.
- அவரை அலை இழுத்து சென்றதால் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற டிரைவர்கள் அலறல் சத்தம் போட்டனர்.
புதுச்சேரி:
புதுவை கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி லாரி டிரைவர் பலியானார்.
மகாராஷ்டிரா மாநிலம் தகாரி பகுதியை சேர்நதவர் பாலாஜி பகோரா(வயது47). இவர் கண்டெய்னர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். மகாராஷ்டிராவில் இருந்து பொருட்களை கண்டெய்னர் லாரியல் ஏற்றி கொண்டு நேற்று காலை திருபுவனையில உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு கொண்டு வந்தார்.
அப்போது பொருட்கள் இறக்க காலதாமதம் ஏற்பட்டதால் அங்கிருந்த மற்ற 3 டிரைவர்களுடன் பாலாஜி பகோரா பொழுது போக்கிற்காக புதுவை கடற்கரைக்கு வந்தனர்.
காந்தி சிலை பின்புறம் 4 பேரும் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் பாலாஜி பகோரா சிக்கிக்கொண்டார். அவரை அலை இழுத்து சென்றதால் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற டிரைவர்கள் அலறல் சத்தம் போட்டனர்.
உடனே அங்கிருந்தவர்கள் கடலில் இறங்கி பாலாஜி பகோராவை மீட்டனர். பின்னர் அவரை மற்ற டிரைவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பாலாஜி பகோரா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடலில் மூழ்கி பலியான பாலாஜி பகோராவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
வில்லியனூர்:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் இன்று வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட மணவெளியில் அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார்.
பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தேர்தல் அமைதியான முறையில், அதே வேளையில் விறுவிறுப்பாகவும் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. அதற்கு காரணம் மத்தியில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
மோடியின் எதிர்ப்பு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. அதேபோல் புதுவையிலும் மோடியை பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
இந்தியா முழுவதும் ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும் என்ற எழுச்சி அலை வீசுகிறது. அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என்று தெரிந்து விட்டது.
தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அந்த தொகுதி மக்கள் ஆளுங்கட்சி வேட்பாளரை எம்.எல்.ஏ.வாக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #rahulgandhi #pmmodi #TNElections2019
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை பதிவு செய்தார்.
அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு தமிழக மக்கள் அங்கீகாரம் கொடுக்கும் வகையில் மக்கள் வாக்களிக்க வாக்களித்து வருகின்றனர். சாத்தூர் தொகுதி உள்பட அனைத்து இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெறுவார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அலை வீசுகிறது. மக்கள் எழுச்சியுடன் வாக்களித்து வருகிறார்கள.
தமிழகத்தில் பணப் புழக்கம் அதிகமாக உள்ளது என்ற கேள்விக்கு பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். தேர்தலுக்காக மக்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
வருமானவரித்துறை, ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு ஆளும் கட்சியினர் மீது எதிர்க்கட்சிகள் சொல்லுவது புதிதல்ல. அ. ம.மு.க., தி.மு.க. கட்சிகள் மீது மக்கள் எதிர்ப்பு உள்ளது. தினகரன் நாட்டை கொள்ளையடிப்பதற்காகவே கூட்டத்தை கூட்டியுள்ளார்.
சாத்தூர் அ.ம.மு.க. வேட்பாளர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 43 லட்சத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது. கொள்ளையடிக்கவே இருவரும் ஆட்சிக்கு வர துடிக்கின்றனர்.
ஆட்சியை மத்தியிலும் மாநிலத்திலும் கவிழ்ப்பேன் என திரிகிறார். பிரசாரத்தில் ஸ்டாலின் குணாதிசியம் தெரிந்தது. மக்கள் நலனில் அக்கறை இல்லை. மீண்டும் மோடி பிரதமராக வருவார்.
இவ்வாறு அவர் கூறினார். #ministerrajendrabalaji #admk #TNElections2019