என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதல் 3 போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது.
    • காயம் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 4வது போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் முனைப்பு காட்டும்.

    காயம் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஸ்மித் செயல்படுகிறார் .

    அதே நேரத்தில் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் வென்று ஆறுதல் வெற்றி பெற இங்கிலாந்து அணி தயாராகி வருகிறது.

    இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    • முதல் 2 ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது.
    • இன்றைய ஆட்டத்திலும் வென்று இந்திய அணி தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    திருவனந்தபுரம்:

    இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது.

    முதல் 2 ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

    இந்திய அணி முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இலங்கையை வீழ்த்தியது.

    இந்நிலையில், இந்தியா-இலங்கை மகளிர் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.

    இதில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    இலங்கை அணி தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    • தன்னிடம் பும்ரா, ரிஷப்பண்ட் மன்னிப்பு கேட்டதாக பவுமா கூறியுள்ளார்.
    • அதேநேரத்தில் தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர், இந்தியர்களை அவமதிப்பாக பேசியதையும் கண்டித்துள்ளார்.

    கொல்கத்தா:

    பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியா வை சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. டெஸ்ட் தொடரை இழந்தாலும் இந்திய அணி ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரை கைப்பற்றி இருந்தது.

    டெஸ்ட் தொடரின் போது தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமாவை குள்ளமாக இருப்பதால் 'பவுனா' என கிண்டல் செய்து வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பேசினார்.

    கொல்கத்தா டெஸ்டின் போது ரிஷப்பண்டிடம் எல்.பி.டபிள்யு தொடர்பாக டி.ஆர்.எஸ்.எடுப்பது குறித்து விவாதித்த போது இதை அவர் தெரிவித்தார்.

    இது சர்ச்சையான நிலையில் தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் இந்திய அணியை மண்டியிட செய்வது போன்ற பொருள்படும்படியான 'க்ரோவல்' எனும் வார்த்தையை பயன்படுத்தினார். இது ரசிகர்கள் இடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தன்னிடம் பும்ரா, ரிஷப்பண்ட் மன்னிப்பு கேட்டதாக பவுமா கூறியுள்ளார். அதேநேரத்தில் தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர், இந்தியர்களை அவமதிப்பாக பேசியதையும் கண்டித்துள்ளார்.

    இது குறித்து பவுமா கூறியதாவது:-

    என்னைப் பற்றி அவர்களது மொழியில் ஏதோ பேசியது எனக்கும் தெரியும். போட்டி முடிந்த பிறகு மூத்த வீரர்களான பும்ரா, ரிஷப்பண்ட் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார்கள்.

    அவர்கள் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டதும் முதலில் புரிந்து கொள்ள முடியவில்லை. அது என்னவாக இருக்கும் என்று எனது ஊடக மேலாளரிடம் கேட்டேன்.

    மைதானத்தில் பேசியது அங்கேயே இருக்கும். ஆனால் நீங்கள் பேசியதை மறந்துவிடாதீர்கள். அதை உத்வேகமாக மாற்றிக் கொள்ளலாம். அதில் வன்மம் வைத்துக்கொள்ள எதுவும் இல்லை. எனது பயிற்சியாளர் தெரிவித்த கருத்தும் கண்டனத்துக்குரியது.

    இவ்வாறு பவுமா கூறி உள்ளார்.

    • இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தை சேர்ந்த பிரெண்டன் மெக்கல்லம் உள்ளார்.
    • ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்தது விமர்சனத்துக்குள்ளானது.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்தது. 3 போட்டியிலும் ஆஸ்திரேலியாவே வென்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தை சேர்ந்த பிரெண்டன் மெக்கல்லம் உள்ளார். அவர் 2022 முதல் இங்கிலாந்து பயிற்சியாளராக உள்ளார். 2024-ல் அனைத்து வடிவங்களுக்கும் பொறுப்பேற்றார். 2027 வரை ஒப்பந்தம் உள்ளது, ஆனால் அவரது எதிர்காலம் குறித்து உறுதியற்ற நிலை நிலவுகிறது.

    அதற்கு முக்கிய காரணமாக சமீபத்திய ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்தது விமர்சனத்துக்குள்ளானது.

    மெக்கலத்திற்குப் பிறகு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மான்டி பனேசர் யோசனை கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பிரெண்டன் மெக்கலத்திற்குப் பிறகு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும்.


    ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் எப்படி தோற்கடிக்க வேண்டும் என்பதை கச்சிதமாக தெரிந்த ஒருவரை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் பலம், பலவீனம், திட்டங்கள், மனம் ஆகியவற்றைத் அறிந்து, அதிலிருந்து எப்படி உங்களால் சாதகத்தை எடுத்துக் கொள்ள முடியும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.

    அந்த வகையில் ஆஸ்திரேலியாவை எப்படி வீழ்த்த முடியும்? எனத் தெரிந்தவர் அவர்தான் என பனேசர் கூறினார். 

    • 2027-ம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாட விராட் கோலி ஆவலாக உள்ளார்.
    • கோலி விளையாடிய கடைசி 5 போட்டிகளில் 3 சதம், 2 அரைசதம் விளாசியுள்ளார்.

    இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி. இவர் 2008-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து, சுமார் 17 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

    3 வடிவத்திலும் பல சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக, சர்வதேச கிரிக்கெட்டில் 84 சதங்களுடன் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். (டெஸ்டில் 30, ஒருநாள் போட்டிகளில் 53, டி20யில் 1).

    இவர் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். 2027-ம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாட விராட் கோலி ஆவலாக உள்ளார்.

    37 வயதிலும் அவர் மிக உயர்ந்த உடல் தகுதியுடன் உள்ளார். இது இன்னும் சில ஆண்டுகள் அவர் விளையாட உதவும். அவர் தற்போது மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். சமீபத்திய ஒருநாள் தொடர்களில் அவர் தொடர்ந்து சதங்கள் அடித்து வருகிறார்.

    மேலும் விஜய் ஹசாரே தொடரிலும் அவர் சதம் அடித்து அசத்தி உள்ளார். இதன் மூலம் விராட் கோலி விளையாடிய கடைசி 5 போட்டிகளில் 3 சதம், 2 அரை சதம் விளாசியுள்ளார்.

    இந்நிலையில் 2027 உலகக் கோப்பைக்கு விராட் கோலி முழுமையாகத் தயாராக உள்ளார் என அவரது சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறியுள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட், இந்தியாவுக்காக பல போட்டிகளில் வெற்றி பெற்ற விதம் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. வேறு யாரும் அவரைப் போல இந்தியாவுக்காக இவ்வளவு போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை என்று நினைக்கிறேன். அவர் என் மாணவர் என்பதில் எனக்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது. இதை விட பெரிய பெருமை என்ன இருக்க முடியும்.

    விராட் கோலி அற்புதமான ஃபார்மில் இருக்கிறார். அவர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து டெல்லியின் வெற்றியை உறுதி செய்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினார், ஆனால் இன்னும் விதிவிலக்காக சிறப்பாக செயல்பட்டார். அவர் இந்திய அணியில் மிகவும் நிலையான வீரர் மற்றும் 2027 உலகக் கோப்பைக்கு முழுமையாக தயாராக உள்ளார். 

    என ராஜ்குமார் சர்மா கூறினார்.

    • சிந்து 2026-ம் ஆண்டு முதல் 2029-ம் ஆண்டு வரை பதவி காலம் வகிப்பார்.
    • BWF கவுன்சிலின் உறுப்பினராகவும் பிவி சிந்து பணியாற்றுவார்.

    இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து. இவர் பேட்மிண்டன் உலக சம்மேளனத்தின் (BWF) விளையாட்டு வீரர்கள் கமிஷனின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 2026-ம் ஆண்டு முதல் 2029-ம் ஆண்டு வரை பதவி காலம் வகிப்பார். மேலும் அவர் BWF கவுன்சிலின் உறுப்பினராகவும், வாக்குரிமை கொண்ட உறுப்பினராகவும் பணியாற்றுவார்.

    டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரென் அவரது துணைத் தலைவராகப் பணியாற்றுவார். ஆமி பர்னெட் (அமெரிக்கா), குய்லூம் கெயில்லி (பிரான்ஸ்), அபு ஹுபைடா (இந்தியா), மற்றும் தாரெக் அப்பாஸ் கரிப் சஹ்ரி (எகிப்து) ஆகியோர் ஆணையத்தின் மற்ற உறுப்பினர்கள் ஆவர்.

    சிந்து 2017 முதல் இந்த கமிஷனில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார் மற்றும் 2020 முதல் BWF இன்டெக்ரிட்டி அம்பாசிடராகவும் இருந்து வருகிறார். அவர் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்க வென்றவர் மற்றும் 2019 உலக சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அர்ஜூனா விருதுக்கான பரிந்துரையில் 24 பேர் இடம்பெற்றுள்ளனர்.
    • இதில் கிரிக்கெட்டை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.

    புதுடெல்லி:

    விளையாட்டுத் துறையில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மேயர் தயான்சந்த் கேல்ரத்னா விருது மற்றும் அர்ஜூனா விருதுகளை வழங்கி வருகிறது.

    விளையாட்டுத் துறையில் மிக உயர்ந்த விருதான கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஹாக்கி அணியின் துணை கேப்டனான ஹர்திக் சிங் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில் கேல் ரத்னா விருது யாருக்கும் இல்லை என்று மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

    உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர், ஸ்மிருதி மந்தனா மற்றும் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் பெற்ற இந்திய ஹாக்கி அணி துணை கேப்டன் ஹர்திக் சிங் ஆகிய 3 பேரது பெயர்கள் விவாதிக்கப்பட்டது. இறுதியில் யாருக்கும் இந்த ஆண்டு கேல் ரத்னா விருது வழங்க வேண்டாம் என்று தேர்வு செய்யும் குழு ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

    1991-ம் ஆண்டு கேல் ரத்னா விருது அறிமுகம் செய்யப்பட்டது. செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் முதல் விருதை பெற்றார். 2008, 2014 ஆகிய 2 முறை கேல் ரத்னா விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு டி.குகேஷ் (செஸ்), ஹர்மன் பிரீத் சிங் (ஹாக்கி), பிரவீன் குமார் (பாரா தடகளம்), மனுபாக்கர் (துப்பாக்கி சுடுதல்) ஆகிய 4 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

    அர்ஜூனா விருதுக்கான பரிந்துரையில் 24 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் கிரிக்கெட்டை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. தொடர்ந்து 2-வது ஆண்டாக அர்ஜூனா விருது பட்டியலில் கிரிக்கெட் வீரர்கள் இடம்பெறவில்லை.

    கிரிக்கெட் வீராங்கனைகளில் முன்னாள் கேப்டனான மிதாலிராஜ் (2021) மட்டுமே அர்ஜூனா விருதை பெற்று இருந்தார். கிரிக்கெட் வீரர்களில் டெண்டுல்கர் (1997-98), டோனி (2007), விராட்கோலி (2018), ரோகித் சர்மா (2019) ஆகியோர் கேல் ரத்னா விருதை பெற்று இருந்தனர்.

    • அருணாசலபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பீகார் பேட்ஸ்மேன்கள் மொத்தம் 38 சிக்சர்களை பறக்க விட்டனர்.
    • விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் சதம் அடித்த 3 வீரர்களை கொண்ட அணி என்ற பெருமையை பீகார் பெற்றது.

    இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் நேற்று முதல் ஜனவரி 18-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கியது. இந்த போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த பல்வேறு போட்டிகளில் பல சாதனைகள் அரங்கேறியுள்ளது.

    •அதன்படி அருணாசலபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பீகார் பேட்ஸ்மேன்கள் மொத்தம் 38 சிக்சர்களை பறக்க விட்டனர். ஆண்கள் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் நொறுக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கை இது தான். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கனடா 28 சிக்சர் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

    •பீகார் அணியில் சூர்யவன்ஷி, ஆயுஷ் லோஹருகா, கானி ஆகியோர் செஞ்சுரி போட்டனர். விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் சதம் அடித்த 3 வீரர்களை கொண்ட அணி என்ற பெருமையை பீகார் பெற்றது.

    •சீனியர் பிரிவில் சூர்யவன்ஷி இதுவரை 4 சதங்கள் அடித்துள்ளார். இவற்றில் 3 சதம் 20 ஓவர் போட்டியில் வந்தவை. 15 வயதுக்கு முன்பாக லிஸ்ட் ஏ மற்றும் 20 ஓவர் போட்டியில் சதத்தை ருசித்த ஒரே வீரர் சூர்யவன்ஷி தான்.

    •அருணாசலபிரதேச வேகப்பந்து வீச்சாளர் மிபோம் மோசு 9 ஓவர்களில் 116 ரன்களை வாரி வழங்கினார். அவர் 'லிஸ்ட் ஏ'-ல் அதிக ரன்களை அள்ளிகொடுத்த மோசமான பந்து வீச்சாளர் பட்டியலில் இணைந்தார். 2023-ம்ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நெதர்லாந்தின் பேஸ் டி லீட் 115 ரன்களை வழங்கியதே முந்தைய மோசமான பந்து வீச்சாக இருந்தது

    விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் பீகார் வீரர்கள் சூர்யவன்ஷி 36 பந்திலும், சகிபுல் கானி 32 பந்திலும் சதம் விளாசிய நிலையில் அதற்கு சற்று முன்பாக ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் 33 பந்தில் சதம் அடித்தார். ஆனால் அவரது சதத்துக்கு பலன் இல்லை.

    அமதாபாத்தில் நடந்த கர்நாடகாவுக்கு எதிரான ஆட்டத்தில் ('ஏ' பிரிவு) முதலில் பேட் செய்த ஜார்கண்ட் 9 விக்கெட்டுக்கு 412 ரன்கள் குவித்தது. 33 பந்தில் சதத்தை எட்டிய இஷான் கிஷன் 125 ரன்களில் (39 பந்து, 7 பவுண்டரி, 14 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய கர்நாடகா 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 413 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விஜய் ஹசாரேயில் ஒரு அணி விரட்டிப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச இலக்கு இதுவாகும். தேவ்தத் படிக்கல் 147 ரன்கள் (118 பந்து, 10 பவுண்டரி, 7 சிக்சர்) திரட்டினார்.

    விஜய் ஹசாரே தொடரில் நேற்று ஒரே நாளில் 22 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பால்ம் பீச்சில் திருமண நிகழ்ச்சிகள் 5 நாட்கள் வெகுவிமரிசையாக நடந்தது.
    • வீனசை விட பிரெடி 8 வயது குறைவானவர்.

    புளோரிடா:

    அமெரிக்காவின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையும், 7 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமான 45 வயதான வீனஸ் வில்லியம்ஸ், இத்தாலி நடிகரும், மாடலிங் துறையை சேர்ந்தவருமான ஆன்ட்ரியா பிரெடியை காதலித்து வந்தார்.

    கடந்த செப்டம்பரில் இவர்களது திருமணம் இத்தாலியில் எளிய முறையில் நடந்தது. ஆனால் அந்த திருமணத்தை சட்டபூர்வமாக பதிவு செய்வதில் சில நடைமுறை சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து வீனஸ்-ஆன்ட்ரியா பிரெடி மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து கொண்டனர்.

     

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பால்ம் பீச்சில் திருமண நிகழ்ச்சிகள் 5 நாட்கள் வெகுவிமரிசையாக நடந்தது. இதில் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு புதுமணஜோடியை வாழ்த்தினர். பிரெடி, வீனசை விட 8 வயது குறைவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒடிசா அணியின் ஸ்வஸ்திக் சமல் இரட்டை சதமடித்து 202 ரன்கள் எடுத்தார்.
    • பீகார் அணியின் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி 190 ரன் எடுத்து இரட்டை சதத்தை தவறவிட்டார்.

    புதுடெல்லி:

    இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் நேற்று தொடங்கியது. இந்தத் தொடர் ஜனவரி 18-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.

    நேற்று நடந்த பல்வேறு போட்டிகளில் நட்சத்திர வீரர்கள் உள்பட இளம் வீரர்களும் சதமடித்து அசத்தியுள்ளனர்.

    நேற்று ஒரே நாளில் 22 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

    பீகார் அணியின் சூர்யவன்ஷி 190 ரன்னும், சகிபுல் கனி 128 ரன்னும், ஆயுஷ் லோஹருகா 116 ரன்னும் அடித்தனர்.

    ஒடிசா அணியின் ஸ்வஸ்திக் சமல் 202 ரன்னும், பிப்லாப் சமந்த்ரே 100 ரன்னும் எடுத்தனர்.

    விதர்பா அணியின் துருவ் ஷோரே 136 ரன்னும், அமன் மோகடே 110 ரன்னும் எடுத்தனர்.

    மேகாலயா அணியின் கிஷான் லிங்டோ 106 ரன்னும், அர்பித் படேவரா 104 ரன்னும் அடித்தனர்.

    மும்பை அணியின் ரோகித் சர்மா 155 ரன்னும், கர்நாடகா அணியின் தேவ்தத் படிக்கல் 147 ரன்னும், சவுராஷ்டிரா அணியின் சம்மார் கஜ்ஜார் 132 ரன்னும் எடுத்தனர்.

    டெல்லி அணியின் விராட் கோலி 131 ரன்னும், ஜம்மு காஷ்மீர் அணியின் ஷுபம் கஜுரியா 129 ரன்னும், அரியானா அணியின் ஹிமான்ஷு ரானா 126 ரன்னும் அடித்தனர்.

    ஜார்க்கண்ட் அணியின் இஷான் கிஷன் 125 ரன்னும், ஆந்திரா அணியின் ரிக்கி புய் 122 ரன்னும் எடுத்தனர்.

    ரயில்வேஸ் அணியின் ரவி சிங் 109 ரன்னும், கோவா அணியின் ஸ்நேஹல் கவுதன்கர் 107 ரன்னும், மத்திய பிரதேச அணியின் யாஷ் துபே 103 ரன்னும், கேரளா அணியின் விஷ்ணு வினோத் 102 ரன்னும், மணிப்பூர் அணியின் ஜோடின் பெய்ரோஜியாம் 101 ரன்னும் அடித்தனர்.

    • பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • பந்துவீச்சாளர் தரவரிசையில் வருண் சக்கரவர்த்தி முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

    துபாய்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.

    பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் திலக் வர்மா தென் ஆப்பிரிக்கா தொடரில் 187 ரன்கள் குவித்து ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

    இளம் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

    பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி தென் ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக செயல்பட்டு முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இந்த தொடரில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 10 இடங்கள் முன்னேறி 18வது இடத்தைப் பிடித்தார். அவர் மூன்று போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். அக்சர் படேல் ஒரு இடம் சரிந்து 10வது இடத்திற்குச் சென்றார்.

    • கம்பீர் தலைமையில் இந்திய அணி வெள்ளைப் பந்து போட்டிகளில் பொதுவாக வலுவாக செயல்பட்டது.
    • டெஸ்ட் போட்டிகளில் வெற்றி விகிதம் குறைவாக உள்ளது.

    இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இருந்து வருகிறார். இவர் தலைமையில் 2025-ம் ஆண்டில் இந்திய அணி சாதித்ததும் சருக்கியது குறித்த தகவலை இந்த செய்தியின் மூலம் காணலாம்.

    அவரது தலைமையில் இந்திய அணி வெள்ளைப் பந்து (ODI, T20I) போட்டிகளில் பொதுவாக வலுவாக செயல்பட்டது, குறிப்பாக 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் கடுமையான சவால்களை எதிர்கொண்டது. 2025-ல் அணி மொத்தம் சுமார் 42 சர்வதேச போட்டிகளில் விளையாடி 32-ஐ வென்றது, ஆனால் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி விகிதம் குறைவாக இருந்தது.

    இந்திய அணியின் முக்கிய வெற்றிகள்:ICC சாம்பியன்ஸ் டிராபி 2025 (பிப்ரவரி-மார்ச், பாகிஸ்தான்): இந்தியா சாம்பியன் ஆனது. இது கம்பீரின் முதல் மேஜர் ஐசிசி தொடர் வெற்றி.

    இந்தியா vs தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர் (நவம்பர்-டிசம்பர்): 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

    இந்தியா vs தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் (டிசம்பர்): 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது (ஒரு போட்டி ரத்து).

    ஆஸ்திரேலியா vs இந்தியா டி20 தொடர்: (அக்டோபர்-நவம்பர்): 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது (ஒரு போட்டி ரத்து).

    இங்கிலாந்து சுற்றுப்பயணம் (ஜூன்-ஆகஸ்ட்): டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் (டிரா). ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்தியா பெரும்பாலும் வென்றது.

    மேற்கிந்திய தீவுகள் vs இந்தியா டெஸ்ட் தொடர் (அக்டோபர்): 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

    ஆசியா கோப்பை 2025 (செப்டம்பர், யுஏஇ): இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

    முக்கிய தோல்விகள்:

    இந்தியா vs தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் (நவம்பர்): 0-2 என்ற கணக்கில் தோல்வி (ஹோம் தொடர் வைட்வாஷ்).

    பார்டர்-கவாஸ்கர் தொடர் (2024-25, ஆஸ்திரேலியா): மொத்தம் 1-3 தோல்வி (1 டிரா உடன்), 2025-ல் கடைசி போட்டி (சிட்னி) உட்பட சில தோல்விகள்.

    இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடர்: 2-2 டிரா, ஆனால் சில போட்டிகளில் தோல்வி.

    வெள்ளைப் பந்து தொடர்களில் சில தனிப்பட்ட போட்டி தோல்விகள். உதாரணமாக தென் ஆப்பிரிக்கா vs இந்தியா 2-வது ஒருநாள்

    மொத்த டெஸ்ட் ரெக்கார்ட் (கம்பீர் தலைமையில் 2024-25): 19 போட்டிகள், 7 வெற்றிகள், 10 தோல்விகள், 2 டிராக்கள் - இதில் 2025-ல் பெரும்பகுதி தோல்விகள் வந்தன.

    வெள்ளைப் பந்தில் அணி வலுவாக இருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் சரிவு மற்றும் ஹோம் தோல்விகள் கம்பீருக்கு விமர்சனங்களை ஏற்படுத்தின. 

    ×