வழிபாடு

காஞ்சீபுரத்தில் 1 லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவலிங்கம்

Published On 2023-04-23 14:30 IST   |   Update On 2023-04-23 14:30:00 IST
  • சிவலிங்க வீதி உலாவின் போது சிவவாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
  • ருத்ராட்ச சிவலிங்கத்தை வழிபட ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.

காஞ்சீபுரம் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் 8 அடி அகலம்,8 அடி உயரத்தில 5 முகங்கள் உடைய ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சங்களால் ஆன சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டது.

இதனை பூ வியாபாரி கார்த்திகேயன் என்பவர் தலைமையில் ஏராளமான சிவனடியார்கள் ஒன்று சேர்ந்து ராஜவீதிகளில் வீதி உலாவாக எடுத்து வந்தனர்.

இந்த பிரம்மாண்ட ருத்ராட்ச சிவலிங்கத்தை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் மலர்தூவி வரவேற்று பயபக்தியுடன் வழிபட்டனர். பூக்கடை சத்திரத்தில் தொடங்கிய சிவலிங்கம் உலா பின்னர் திருவண்ணாமலை மாவட்டம் பர்வதமலை அடிவாரம் அடைந்ததும் அங்குள்ள உள்ள நித்ய அன்னதான சத்திரத்தின் தலைவர் விஸ்வநாதனிடம் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

சிவலிங்க வீதி உலாவின் போது சிவவாத்தியங்கள் இசைக்கப்பட்டன. ருத்ராட்ச சிவலிங்கத்தை வழிபட ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.

Tags:    

Similar News