வழிபாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்துக்கு 12 மணி நேரமாகிறது

Published On 2023-04-29 06:23 GMT   |   Update On 2023-04-29 06:23 GMT
  • வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள அறைகள் பக்தர்களால் நிரம்பியது.
  • நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளிமா நிலையில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

இதனால் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் நேற்று 59 ஆயிரத்து 71 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இவர்களில் 27 ஆயிரத்து 651 பேர் முடி காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. அதில் ரூ.4.12 கோடி காணிக்கையாக கிடைத்ததுள்ளது. இந்த நிலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள அறைகள் பக்தர்களால் நிரம்பியது.

இலவச தரிசனத்திற்கு 12 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News