இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 3 ஏப்ரல் 2025
- இன்று சஷ்டி விரதம்.
- தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-20 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சஷ்டி பின்னிரவு 3.46 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: ரோகிணி நண்பகல் 12.32 மணி வரை பிறகு மிருகசீரிஷம்
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சஷ்டி விரதம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி ரதோற்சவம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் உற்சவம் ஆரம்பம். தோளுக்கினியா னில் பவனி. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அன்ன வாகனத்தில் புறப்பாடு. திருப்புல்லாணி ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தேர்ச்சி
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-லாபம்
கடகம்-செலவு
சிம்மம்-ஆதாயம்
கன்னி-வரவு
துலாம்- சுகம்
விருச்சிகம்-விருத்தி
தனுசு- கவனம்
மகரம்-ஆக்கம்
கும்பம்-பயணம்
மீனம்-உயர்வு