உள்ளூர் செய்திகள்

காரைக்குடி: மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2022-12-22 13:39 IST   |   Update On 2022-12-22 13:39:00 IST
  • காரைக்குடியில் வருகிற 24-ந் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
  • இந்த முகாமை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சிவகங்கை

சிவகங்கை மாவ ட்டத் தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத் தின் கீழ் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் வகையில் வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதனை விளை யாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர்.

இந்த முகாமில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இருபாலரும் கலந்து கொண்டு பயனடையலாம். முகாமுக்கு வருபவர்கள் தங்களின் கல்வித்தகுதி, அடையாள அட்டை, தொழில் நுட்ப தகுதி, முன் அனுபவம், சாதி சான்று, இருப்பி டச்சான்று, வருமானச்சான்று உள்ளிட்ட வைகளையும், அசல் மற்றும் சான்றொப்ப மிட்ட புகைப்பட நகல் ஆகியவற்றையும் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்ப டுகிறார்கள்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரி வித் துள்ளார்.

Tags:    

Similar News