கர்நாடகாவில் பால் விலை 4 ரூபாய் உயர்கிறது
- நந்தினி ப்ளூ பால் பாக்கெட் தற்போது 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து 4 ரூபாய் உயர்த்தப்பட்டு 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
கர்நாடகாவில் வருகிற 1-ஆம் தேதியில் இருந்து பால் விலை பாக்கெட்டுக்கு (1050 மி.லி.) 4 ரூபாய் உயர்த்தப்பட இருக்கிறது. கூட்டமைப்புகள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தல் காரணமாக விலை உயர்த்தப்பட இருக்கிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கூட்டுறவு அமைச்சர் கே.என். ரஞ்சனா கூறியதாவது:-
பால் கூட்டமைப்பு லிட்டருக்கு ஐந்து ரூபாய் அதிகரித்து தரும்படி கேட்டது. இதனால் பால் விலையை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கப்படும் 4 ரூபாயும், விவசாயிகளுக்குச் செல்லும்" என்றார்.
கர்நாடகாவில் பேருந்து கட்டணம், மேட்ரோ ரெயில் கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது பால் விலை உயர்த்தப்பட இருக்கிறது.
முன்னதாக, கர்நாடக மாநில பால் கூட்டமைப்பு தலைவர் பீமா நாயக், பால் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
கடந்த வரும் ஒரு லிட்டர் பாக்கெட்டில் 50 மி.லி. பால் அதிகரிக்கப்பட்டு, 2 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. தற்போது 1050 மி.லி. கொள்ளளவு கொண்ட நந்தினி ப்ளூ பால் பாக்கெட் 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.