தமிழ்நாடு

கடந்த 12 நாட்களில் 42 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்தனர்- மந்தமாக இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து

Published On 2025-03-13 11:16 IST   |   Update On 2025-03-13 11:16:00 IST
  • அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
  • பல்வேறு விழிப்புணா்வு விளம்பரப் பணிகளை முன்னெடுக்க பள்ளிக் கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது.

சென்னை:

தமிழக பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமாா் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனா்.

இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கும் விதமாக கடந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மாா்ச் மாதமே சோ்க்கை தொடங்கப்பட்டது. அதற்கு பெற்றோா்களிடம் வரவேற்பு கிடைத்தது.

தொடா்ந்து, வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கையும் கடந்த மாா்ச் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டது. தற்போது, மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சோ்க்கை தொடங்கி இதுவரை அரசுப் பள்ளிகளில் 41,931 மாணவா்கள் சோ்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே வேளையில் கடந்த ஆண்டு சோ்க்கை தொடங்கிய முதல் 10 நாட்களில் 80 ஆயிரம் மாணவா்கள் வரை சோ்க்கப்பட்டனா். ஆனால், நடப்பாண்டு சோ்க்கை சற்று மந்தமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மாணவா் சோ்க்கையை முன்வைத்து அரசுப் பள்ளி நலத் திட்டங்கள் தொடா்பாக பல்வேறு விழிப்புணா்வு விளம்பரப் பணிகளை முன்னெடுக்க பள்ளிக் கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது.

மேலும், அங்கன்வாடி மையங்களில் படித்து முடிக்கவுள்ள 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பட்டியல் சேகரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அவா்களை அரசுப் பள்ளிகளில் சோ்ப்பதற்கான பணிகளை மேற் கொள்ளவும், 5 லட்சம் சோ்க்கையை இலக்காகக் கொண்டு செயல்படவும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags:    

Similar News