தமிழ்நாடு

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் காலமானார்
- இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
- 2015ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
அ.தி.மு.க. நிர்வாகியும், முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர் அ.தி.மு.க. நெல்லை மாவட்ட செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
அதிமுகவில் இருந்து 1977, 1980 தேர்தல்களில் சட்டப்பேரவைக்கு தேர்வான இவர், 2000ம் ஆண்டில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் தி.மு.க.வில் இணைந்தார். 2006 தேர்தலில் தென்காசி தொகுதியில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.-வாக தேர்வான இவர், 2015ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
2016ல் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு திரும்பிய அவருக்கு, சசிகலா பொதுச் செயலாளராக இருந்தபோது அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், 2017ல் கட்சியில் இருந்து விலகி 2020ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அ.தி.மு.க.-வில் இணைந்தார்.