தமிழ்நாடு
சென்னை மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதம் - 110 கவுன்சிலர்கள் ஆப்சென்ட்

சென்னை மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதம் - 110 கவுன்சிலர்கள் ஆப்சென்ட்

Published On 2025-03-21 10:47 IST   |   Update On 2025-03-21 10:47:00 IST
  • சென்னை பெருநகர மாநகராட்சியில் முதன்முறையாக 8,404.70 கோடி ரூபாய்க்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • சென்னை மாநகராட்சியில் மேயர் பிரியா தலைமையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.

சென்னை மாநகராட்சியின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம், ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. மேயர் பிரியா 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சென்னை பெருநகர மாநகராட்சியில் முதன்முறையாக 8,404.70 கோடி ரூபாய்க்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வருவாய் செலவினம் ரூ.5,214.09 கோடி, மூலதன செலவினம் ரூ.3,190.6 கோடி என மொத்தம் ரூ.8,404.70 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மேயர் பிரியா தலைமையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.

மாநகராட்சி கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக உள்ளன. 100-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. சென்னை மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்க கவுன்சிலர்கள் ஆர்வம் காட்டவில்லை.

பட்ஜெட் மீதான விவாதத்தில் மொத்தமுள்ள 200 கவுன்சிலர்களில் சுமார் 90 பேர் மட்டுமே மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News