தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2025-02-04 11:32 IST   |   Update On 2025-02-04 11:32:00 IST
  • காலநிலை மாற்றத்தை கல்வித்துறை மூலம் புகட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  • காலநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளின் தீவிரத்தை உணர வேண்டும்.

சென்னை:

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை சார்பில் 2 நாட்கள் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

* காலநிலை மாற்றம் என்பது தற்போது உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவாலாக உள்ளது.

* காலநிலை மாற்றத்தை கல்வித்துறை மூலம் புகட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

* இந்தியாவிலேயே முதல் முறையாக கால நிலை மாற்றம் குறித்து ஆராய மாநாடு நடத்தியது தமிழ்நாடு மட்டும்தான். காலநிலை மாற்றம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். தற்போது வரை தமிழ்நாட்டில் இரு முறை காலநிலை உச்சிமாநாடுகள் நடைபெற்றுள்ளன.

* தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். இயற்கை வளங்களை பாதுகாக்க அக்கறை கொண்ட சமூகமாக மாற வேண்டும்.

* காலநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளின் தீவிரத்தை உணர வேண்டும்.

* வயநாடு மற்றும் திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவை மறந்திருக்க முடியாது.

* வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளோம். வெப்ப அலை தாக்கத்தின் போது மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்த நடவடிக்கை.

* நீர்நிலைகள் மறுசீரமைப்பு, பல்லுயிர் பெருக்கம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். 

Tags:    

Similar News