தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு
- காலநிலை மாற்றத்தை கல்வித்துறை மூலம் புகட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
- காலநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளின் தீவிரத்தை உணர வேண்டும்.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை சார்பில் 2 நாட்கள் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
* காலநிலை மாற்றம் என்பது தற்போது உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவாலாக உள்ளது.
* காலநிலை மாற்றத்தை கல்வித்துறை மூலம் புகட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
* இந்தியாவிலேயே முதல் முறையாக கால நிலை மாற்றம் குறித்து ஆராய மாநாடு நடத்தியது தமிழ்நாடு மட்டும்தான். காலநிலை மாற்றம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். தற்போது வரை தமிழ்நாட்டில் இரு முறை காலநிலை உச்சிமாநாடுகள் நடைபெற்றுள்ளன.
* தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். இயற்கை வளங்களை பாதுகாக்க அக்கறை கொண்ட சமூகமாக மாற வேண்டும்.
* காலநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளின் தீவிரத்தை உணர வேண்டும்.
* வயநாடு மற்றும் திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவை மறந்திருக்க முடியாது.
* வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளோம். வெப்ப அலை தாக்கத்தின் போது மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்த நடவடிக்கை.
* நீர்நிலைகள் மறுசீரமைப்பு, பல்லுயிர் பெருக்கம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.