தமிழ்நாடு
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகளுக்கு ரூ.60 கோடியில் 910 வாகனங்கள்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகளுக்கு ரூ.60 கோடியில் 910 வாகனங்கள்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2025-03-29 14:44 IST   |   Update On 2025-03-29 14:44:00 IST
  • 96 காவலர் குடியிருப்புகள் மற்றும் 2 காவல் நிலையங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 8 கோடியே 71 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50 காவலர் குடியிருப்புகள், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் 9 கோடியே 34 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 46 காவலர் குடியிருப்புகள், என 18 கோடியே 5 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 96 காவலர் குடியிருப்புகள்;

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் 93 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் மற்றும் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 80 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் என 1 கோடியே 74 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 காவல் நிலையக் கட்டிடங்கள் என்று மொத்தம் 19 கோடியே 80 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 96 காவலர் குடியிருப்புகள் மற்றும் 2 காவல் நிலையங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை துரைப்பாக்கத்தில் 1 கோடியே 20 லட்சத்து 64 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 6 குடியிருப்புகள்; மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் 1 கோடியே 10 லட்சத்து 15 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 2 குடியிருப்புகள்; ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையில் 4 கோடியே 27 லட்சத்து 2 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 19 குடியிருப்புகள்; திருச்சி மாவட்டம் துறையூரில் 3 கோடியே 53 லட்சத்து 44 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 18 குடியிருப்புகள்;

சென்னை மாவட்டம் அம்பத்தூரில் 6 கோடியே 23 லட்சத்து 88 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அலுவலகம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம்; மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் 1 கோடியே 65 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம்;

தேனி மாவட்டம் கடமலைக்குண்டில் 2 கோடியே 32 லட்சத்து 35 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் 1 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் என மொத்தம் 21 கோடியே 51 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தல், காவல்துறையின் பயன்பாட்டிற்காக 5 கோடி ரூபாய் செலவிலான 500 இருசக்கர வாகனங்கள் மற்றும் 27 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவிலான 300 நான்கு சக்கர வாகனங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பயன்பாட்டிற்காக 28 கோடியே 45 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவிலான 50 நீர்தாங்கி வண்டிகள், 10 ஜீப்புகள் மற்றும் 50 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 60 கோடியே 54 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவிலான வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News