தமிழ்நாடு

13 மணல் குவாரிகளை தொடங்குவதற்கு திமுக அரசு நடவடிக்கை எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது- ஜெயக்குமார்

Published On 2025-02-01 03:15 IST   |   Update On 2025-02-01 03:16:00 IST
  • தமிழகத்தை திமுக அரசு பாலைவனமாக மாற்றி வருகிறது.
  • திட்டத்தை கைவிடாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்தார்.

சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-

ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் இயற்கை வளங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தை திமுக அரசு பாலைவனமாக மாற்றி வருகிறது.

மேலும் ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவது தொடர்பான அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நேரத்தில்,13 மணல் குவாரிகளை திறப்பதற்கு திமுக அரசு ஏன் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கேள்வி எழுப்பினார். இந்த திட்டத்தை கைவிடாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்தார்.

இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவது குறித்து எந்த கவலையும் இல்லாமல், கமிஷன், கலெக்ஷன், கரப்ஷனை மட்டுமே நோக்கமாகக் கொண்டு திமுக அரசு செயல்பட்டுக் வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News