தமிழ்நாடு
சென்னையில் இந்தாண்டு E-SPORTS உலக சாம்பியன்ஷிப் போட்டி- உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னையில் இந்தாண்டு E-SPORTS உலக சாம்பியன்ஷிப் போட்டி- உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

Published On 2025-03-28 18:33 IST   |   Update On 2025-03-28 18:33:00 IST
  • இளைஞர்களிடையே E-SPORTS பிரபலம் அடைந்து வருகிறது.
  • சென்னையில் இந்தாண்டு E-SPORTS உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படும்.

தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த வகையில் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

அதன்படி சென்னையில் இந்தாண்டு E-SPORTS உலக சாம்பியன் போட்டி நடத்தப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதில், இளைஞர்களிடையே E-SPORTS பிரபலம் அடைந்து வருவதால், சென்னையில் இந்தாண்டு E-SPORTS உலக சாம்பியன் போட்டி நடத்தப்படும்.

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டில் E-SPORTS சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள உலக சாம்பியன் போட்டி, இந்தியாவின் முக்கியமான E-SPORTS நிகழ்வாக அமையும் என கூறினார்.

Tags:    

Similar News