தமிழ்நாடு

சென்னையில் இந்தாண்டு E-SPORTS உலக சாம்பியன்ஷிப் போட்டி- உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
- இளைஞர்களிடையே E-SPORTS பிரபலம் அடைந்து வருகிறது.
- சென்னையில் இந்தாண்டு E-SPORTS உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படும்.
தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த வகையில் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
அதன்படி சென்னையில் இந்தாண்டு E-SPORTS உலக சாம்பியன் போட்டி நடத்தப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதில், இளைஞர்களிடையே E-SPORTS பிரபலம் அடைந்து வருவதால், சென்னையில் இந்தாண்டு E-SPORTS உலக சாம்பியன் போட்டி நடத்தப்படும்.
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டில் E-SPORTS சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள உலக சாம்பியன் போட்டி, இந்தியாவின் முக்கியமான E-SPORTS நிகழ்வாக அமையும் என கூறினார்.