தமிழ்நாடு

மன உறுதியோடும் மகிழ்ச்சியோடும் தேர்வினை எதிர்கொள்க- மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டிய அமைச்சர்

Published On 2025-03-28 10:21 IST   |   Update On 2025-03-28 10:21:00 IST
  • தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது.
  • திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இன்று தொடங்கும் தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 பள்ளி மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதுகிறார்கள்.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பாக தேர்வு எழுதும் மாணவச் செல்வங்களைச் சந்தித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுத தயாராக இருந்த மாணவச் செல்வங்களைச் சந்தித்து பதற்றம் இல்லாமல், மன உறுதியோடும் மகிழ்ச்சியோடும் தேர்வினை எதிர்கொள்ளுமாறு அவர் நம்பிக்கையூட்டினார்.

Tags:    

Similar News