தமிழ்நாடு
பிரியாணி கடைக்கு சீல் வைப்பு- உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
- பிரியாணி கடையில் ஷவர்மா சாப்பிட்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.
- கெட்டுப்போன சிக்கனை பயன்படுத்தி ஷவர்மா செய்யப்பட்டா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பிரியாணி கடையில் ஷவர்மா சாப்பிட்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் பிரியாணி கடையில் கெட்டுப்போன சிக்கனை பயன்படுத்தி ஷவர்மா செய்யப்பட்டதா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
ஆய்வுக்கு பின்னர் உணவகத்திற்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.